தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 09 - ராசு
செல்போனில் பேசி முடித்துவிட்டு கவலையுடன் தன்னை நோக்கிய முகிலனைக் கேள்வியாகப் பார்த்தான்.
“தென்றல் வீட்டிலிருந்து ஸ்டெல்லாதான் பேசினாள். அங்கே பாட்டிக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன்.”
“சரி. அப்ப வா போகலாம்.”
“இங்கே அப்பாவை நீ பார்த்துக்கோ. நான் மட்டும் போயிட்டு வர்றேன்.”
“அப்பாவுக்கு தூங்கறதுக்காக மருந்து கொடுத்திருக்காங்க. இப்ப தூங்கறார். அதனால் பிரச்சினையில்லை. அங்கே பெண்களாக இருக்காங்க. ஏதாவது உதவி தேவைப்படும். அதனால் தான் உன
...
This story is now available on Chillzee KiMo.
...
“பாட்டீ!” தென்றல் விசும்பினாள்.
“இப்பவாவது ஹாஸ்பிடலுக்கு வர்றீங்களா?”
கெஞ்சலாகக் கேட்டாள்.
அவர் விரக்தியுடன் சிரித்தார்.
“போற உசிரை யாராலும் பிடிச்சு வைச்சிருக்க முடியாது. என்னோட முடிவு எனக்குத் தெரிஞ்சுருச்சு. நான் எங்கே போகப் போறேன். உன்னோடதான் இருப்பேன்.”