முகிலனின் வேண்டுகோளுக்காக மட்டுமல்லாது தோழியைத் தனியே விட மனமின்றி அவளோடு இருப்பதற்காக விடுப்பில் வந்துவிட்டாள் ஸ்டெல்லா.
அவளுக்கு இன்னும் தென்றல் தன்னிடம் சொல்லாத ஏதோ ஒன்று அவளது வாழ்க்கையில் இருக்கிறது என்று புரிந்தது.
இருந்தும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
அவளுக்கே காந்திமதி இல்லாமல் அங்கே இருப்பது ஒரு மாதிரியாய் இருந்தது.
சிறுபிள்ளை போல் தான் அவரிடம் சண்டை போட்டதும் அதற்கு அவரும் சளைக்காமல் பதில் தந்ததும் ஆனால் அதையும் மீறி அவரது பாசத்தை தான் உணர்ந்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது.
கண்டிப்பாக தென்றலால் அதே வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது.
பூமிகா கூட பாட்டியைத் தேடி அடிக்கடி அழ ஆரம்பிக்கிறாள்.
நடந்தது என்ன என்று அறியாத பருவம்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளம்ப வேண்டியதுதானே?”
அவள் அன்று பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று முகிலனுக்குப் போன் பண்ணிய போது அவளது எண்ணை வாங்கிக்கொள்ளத் தோன்றவில்லை என்று தன் நண்பனிடம் கூறியதைச் சொன்னாள்.
“லூசாடி நீ?”
அவளைத் திட்டிக்கொண்டே முறைத்தாள்.
“நீ இப்ப எதுக்கு என்னைத் திட்டறே?”