இவளது வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டால் இல்லத்துப் பெண்கள் தங்களை மாதிரி பெண்களுக்கு இப்படித்தான் வாழ்க்கை அமையுமோ என்று சந்தேகம் கொண்டுவிட்டால் என்ன செய்வது? என்ற கவலையும் சேர்ந்துகொள்ள அவள் இல்லத்துடன் தொடர்பு கொள்ளவே இல்லை.
இப்போது காந்திமதி பாட்டியோடான உறவு உண்டான பிறகு அவர் தனது பேரனைத்தான் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்று நிர்மலா அம்மாவிடமும் சொன்னார். முகிலன் வெளிநாடு சென்ற கதையை தென்றல் மூலம் தெரிந்துகொண்டவர் பேரன் வெளிநாட்டில் இருக்கிறான் என்றார். இருந்தும் நிர்மலா அம்மா எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.
ஒருவேளை அவள் சம்பாதிக்கும் பணம்தான் அவளைக்காக்கும் என்று நினைத்தாரோ என்னவோ?
இப்போது பாட்டியின் இறுதிக்காரியங்களுக்கு அவள் பணம் தர முயன்றபோது முகிலன் அதை வாங்க மறுத்துவிட்டான
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவள் எத்தனை தடுத்தும் சிறிதும் ஓய்வெடுக்காமல் ஏதாவது செய்துகொண்டே இருப்பார் காந்திமதி. அவரின் நடமாட்டம் இல்லாத வீட்டைப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை.
எங்கு பார்த்தாலும் அவர் நிற்பது போன்றே தெரிந்தது.
ஸ்டெல்லா மட்டும் இல்லை என்றால் அவள் என்னவாகியிருப்பாளோ? தெரியாது.