21. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

தேவவ்ரத ஆச்சார்யா..தியா கற்பனை செய்த ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் முதுமைத் தோற்றம்..அவரைப் போல் இவர் எப்படி..??
அதிர்ச்சியா..?? ஆச்சர்யமா..?? விளங்கவில்லை தியாவிற்கு..
தேவவ்ரத ஆச்சார்யா - ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் பெரியப்பா..விக்கி மற்றும் ரிக்கியின் பெரிய தாத்தா..
மறந்தவங்க ஒன்பதாவது ud க்கு ஒரு முறை விசிட் அடிக்கவும்..
தன்னை நிலைபடுதிக்கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது பெண்ணுக்கு..
அவளது செயல்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சார்யாவிற்கு கண்கள் இடுங்கி மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பியது..
“யாரம்மா நீ..?? என்னைப் பார்க்க எதற்கு வந்திருக்கிறாய்..??”,என்று கேட்டார் கம்பீரமாகவும் அவளை எடை போட்ட படியும்..
“தாத்தா..என் பெயர் ஷ்ரனு..நான் ஊட்டியில் இருந்து வரேன்..இந்த ஊர்ல இருக்க கோவிலைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் தெரிந்து கொள்ளவும்..”,என்றாள் அவரைப் பார்த்து சிறிது போலி பவ்யத்துடன்..
அதைக் கண்டுகொண்ட ஆச்சார்யாவின் முகத்தில் சின்ன சிரிப்பென்றால் அம்பிகாவதி பாட்டியின் மனதில் இந்த பொண்ணு வேற ஏதோ பெயர் சொல்லுச்சே என்ற நினைப்பு..
இவர்கள் இருவரின் நினைப்பை தியா கண்டு கொண்டாலும் தொடர்ந்து,”இங்க தங்க உங்கக் கிட்ட உதவி கேட்டா கிடைக்கும்னு சொன்னாங்க..”,என்றாள்..
“யாரு சொன்னாங்க..??”,கூர்மையாக விழுந்தது கேள்வி..
“அது வந்து..”,சற்று தடுமாறியவள் தான் வழியில் கண்ட பெண்ணின் அடையாளங்களை சொல்லி,”அவங்க தான் உங்க கிட்ட உதவி கேட்ட கண்டிப்பா செய்வீங்கன்னு சொன்னாங்க..”,என்றாள்..
“அப்புறம்..??”,என்ற ஆச்சார்யாவின் சிரிப்பு இப்பொழுது அவரது கண்களையும் எட்டியிருந்தது..
இருக்காதா பின்ன.. தியா கூறிய பெண் ஊரில் உள்ள யாரைப் பற்றி விசாரித்தாலும் நல்லது என்று ஒன்றும் சொல்லாதவள்..
அவரது சிரிப்பைக் கண்ட தியாவின் மூளை,”இந்த பெருசு ரொம்ப ஷார்ப் போல..உன் புழுகு மூட்டையை கொஞ்சம் நிறுத்து..”,என்றது மனசாட்சியிடம்..
அதில் சுதாரித்தவள்,”தாத்தா..நீங்க எனக்கு உதவி செய்வீங்கதானே..??”,என்றாள் சற்று பாவமாக..
“அதனால் என்னடா..பார்க்க என் பெயர்த்தி மாதிரி இருக்க..கண்டிப்பா செய்யறேன் ஷ்ரனு..”,என்றார் ஷ்ரனுவில் அழுத்தம் கொடுத்தபடி..
பெயர்த்தி என்ற வார்த்தையில் நெகிழ்ந்து,“தாங்க்ஸ் தாத்தா..”,என்றவளை கண்டு,”நீ இங்க நம்ம வீட்லயே தங்கிக்கோ மா..உனக்கு ஒரு அறையைத் தயார் செய்ய சொல்கிறேன்..”,என்ற ஆச்சார்யா தோட்டத்திற்குள் மீண்டும் நுழைந்தார்..
மேகலை தியாவிற்காக ஒரு அறையை ஒதுக்கிக் கொடுக்க அதில் தஞ்சமடைவள் அந்த அறையை சிறிது நோட்டமிட்டு விட்டு பெட்டில் பொத்தென்ன அமர்ந்தாள்..
தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த ஒரு லிட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை முழுவதும் காலி செய்தவள் தனது கைப்பையை எடுத்து திறந்தாள் அகிலனை கொலை செய்யும் நோக்குடன்..
காலியாக வரவேற்றது அவளது கைப்பை..
(நம்ம அகி உள்ளே இருப்பானா..?? அவன் தான் கேடி ஆச்சே..அவன் எப்போவே எஸ்கேப்..)
காலியாக இருந்த அப்பையைப் பார்த்ததும் பல்லைக் கடித்தவள்,”மகனே கையில் மாட்டாமையா போவ..”,என மனதில் கருவியபடி உறங்கி போனாள் அடுத்த நாள் விடியலை நோக்கி..
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு..
காலை நான்கு மணிக்கே கோவிலில் ஹை டெபிசலில் கணீரென்று ஒலித்த சுப்புலட்சுமி அவர்களின் சுப்ரபாதம் தியாவின் காதுகளில் நாரகாசமாய் விழுந்து தூக்கத்தை கலைக்கத் துவங்கியது..
லேசாக புரண்டவன் அருகில் இருந்த மேஜையிலிருந்த மொபைலை எடுத்து மணியைப் பார்த்துவிட்டு,“ப்ச்..இந்த மிட் நைட்ல இப்படி தூக்கத்தை கெடுக்கறாங்களே..”,என தனக்குத் தானே பேசிவிட்டு தலையணையை காதிற்கு அனையாய் வைத்து தூக்கத்தை தொடரத் துவங்கினாள்..
தூக்கத்தில் இருந்தவளது கனவில் சாரலாய் எதுவோ தூருவது போல் எழுந்த உணர்வில் இதழோரம் ஓர் புன்னகை..
கனவில் சுகமாய் முத்தெடுக்கத் துவங்கியவள் மேல் கணமான நீர் வீழ்ச்சியின் சாரல்..
அடித்துப் பிடுத்து துள்ளி எழுந்தாள் தூக்கத்தை முழுதும் தொலைத்து..