அவளும் நாகரிகம் கருதி அதைப் பற்றிக் கேட்கவில்லை.
வள்ளியம்மை அவளைப் பார்த்த உடனே பணக்கார பந்தா எதுவும் இல்லாமல் அவளிடம் இயல்பாக பழகினார்.
அவளுக்கும் அவரிடம் அன்னியத்தன்மை தெரியவில்லை.
ஆனால் வேலாயுதம் அவளை முதலில் பார்க்கும் போதே சிநேக பாவம் தெரியவில்லை.
ஏதோ கண்காணிப்பது போன்றுதான் அவளுக்குத் தோன்றியது.
அவர் தனது மகனை மணக்கச் சொல்லி அவளிடம் கேட்ட போது அவளால் நம்ப முடியவில்லை. அதை மட்டுமா? வள்ளியம்மை அந்த திருமணத்தை மறுத்ததையும், அதற்குக் காரணமாய் அவள் அநாதை என்றதையும்தான் அவளால் நம்ப முடியவில்லை. தான் இன்னும் வெளி உலகத்தில் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது.
அந்த திருமணப் பேச்சுக்குப் பிறகு அவளிடம் வள்ளியம்மை முகம் திருப்பியதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துச்சென்றார்.
“என்னங்க நீங்க பாட்டுக்கு நாள் கிழமை எதுவும் பார்க்காமல் கல்யாணம் பண்ணிட்டீங்க. நம்ம பையன் நல்லா இருக்க வேண்டாமா?”
“எல்லாம் பார்த்தாச்சு.” பட்டும்படாமலும் பதில் சொன்னார்.
“ஒரு போட்டோகிராஃபரையாவது கூப்பிட்டிருக்கலாம்ல.”
வேலாயுதம் அவரை முறைத்தார்.