அவனுக்கான மருந்துகளை தவறாமல் கொடுத்து வந்தாள்.
அவனை மருந்து சாப்பிட வைப்பற்கே அவள் பெரும்பாடு படவேண்டியிருந்தது.
இப்போது அவளிடம் நன்றாகப் பழகிவிட்டான்.
அவனை அவளால் கணவன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை.
ஒரு சிறுவனாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரண்டும் கெட்டானாய் அவன் இருந்ததில் அவள் தவித்துப்போனாள்.
ஆனாலும் அவனை வெறுக்க அவளால் முடியவில்லை.
சில நேரங்களில் கன்னங்குழிய அவனது சிரிப்பில் அவள் தன்னைத் தொலைத்துவிடுகிறாள்.
வாடகைக்காரில் வந்து வீட்டு வாசலில் இறங்கிய வள்ளியம்மை தனது மகனைப் பார்க்கும் ஆவலில் உள்ளே நுழைந்தார்.
கார் சத்தம் கேட்டு வெளியில் எட்டிப்பார்த்த வேலையாள் வந்து கேட்டைத் திறந்துவிட்டான்.
சிறிது நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு யோசித்தவர் ஒரு தாளை எடுத்து ஏதோ எழுதினார்.
அதை எடுத்துக்கொண்டு அந்த வேலையாளிடம் சென்றவர் அவனிடம் நீட்டினார்.
“இதை எல்லாம் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறியாப்பா. என் மகனுக்கு இதெல்லாம் பிடிக்கும்.”
அவன் தயங்கினான். அதைக் கண்டு கொள்ளாமல் மேலும் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.