“மாட்டேன்மா. மாட்டவே மாட்டேன். உன்னோட உரிமையில் நான் தலையிடவே மாட்டேன்.”
என்று தானும் சிரித்துக்கொண்டே கூறியவர் தங்கள் குடும்பத்ததைப் பற்றி கூறினார்.
மகள் நித்திலா திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் தவிப்பதையும் மருமகனின் நல்ல குணத்தையும் சொன்னார்.
அடுத்த முறை வரும்போது குடும்ப சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வர்றேன் என்று சொன்னார்.
நேரம் போனதே தெரியவில்லை. நேரமாகிவிட்டதை உணர்ந்து கிளம்பினார். தான் வந்த காரின் ஓட்டுனருக்கு அழைத்து கிளம்பும் விசயத்தைச் சொல்லி வரச்சொன்னார்.
கிளம்பும் நேரம் கண்கள் கலங்க மீண்டும் அவளை அணைத்துக்கொண்டார்.
அவளிடம் எதையோ கேட்பதற்கு தயக்கமாக நின்றார்.
“என்ன வேணும்மா? நான் வருணை நல்லபடியா பார்த்துக்கிறேன். நான் ஏமாந்துட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
று அந்த தாயுள்ளம் ஏக்கத்துடன் சொன்னதால் அவளும் அதைக் காட்டிக் காட்டி அவனிடம் அடிக்கடி பேசினாள்.
ஆனால் அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. இருந்தாலும் சளைக்காமல் அவனுடன் பேசிக்கொண்டேயிருந்தாள்.
அந்த முறை வள்ளியம்மை வந்த போது அவருக்கு நேராகவே கணவனை அவளிடம் பணம் கொடுக்க வைத்தார்.