அவருக்குத் தெரிந்தால் ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பிருக்கு. அந்த தென்றலை விரட்டுவது சிரமம் ஆகிவிடும்.
அதனால் இருவர் மட்டும் கிளம்பினர்.
காரில் செல்லும்போதே தென்றலை என்ன செய்வது என்று சுருதி அவரிடம் சொல்லிவிட்டாள்.
“பணம் கொடுத்தா அவ வாங்கிக்கிட்டு விலகிப்போய்விடுவாளா?”
வேலாயுதம் கேட்க சுருதி சிரித்தாள்.
“அவளுக்கு வேறு வழியில்லை மாமா! நான் அப்படித்தான் அவளிடம் பேசப்போறேன். நீங்க அதைப் பத்தி கவலைப்படாதீங்க.”
“என்னவோம்மா! நீ சொன்னேன்னுதான் அந்த அநாதைப் பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன். எனக்கு விருப்பமே இல்லை. அவ என்ன குலமோ கோத்திரமோ தெரியலை. இவ்வளவு சீக்கிரம் அவனுக்கு நினைவு தெளியும்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்.”
அவர்கள் மருத்துவமனைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டமாய் நினைத்துக்கொண்டாள்.
சுருதி வேலாயுதத்திடம் சென்று அவள் பணம் வாங்கிக்கொண்டு விலகிவிட சம்மதித்ததாய் சொன்னதைக் கேட்டதும் அவள் எப்படிப்பட்டவள் என்று தென்றலுக்குப் புரிந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அந்த தலைமை நர்சிடம் கெஞ்சிக் கேட்டு முகிலனைப் பார்க்க உள்ளே சென்றாள்.