அங்கே அவன் மயக்கத்திலிருந்தான். அவனுக்கு சுயநினைவு வந்துவிட்டதா இல்லையா? என்றே தெரியவில்லை. அதற்குள் அந்த சுருதி தன்னை விரட்ட நினைக்கிறாள்.
அவன் அருகே சென்றவளுக்கு அவனைப் பிரிய போகிறோமே என்று துக்கம் பொங்கியது.
தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அறையை விட்டு வெளியேறினாள்.
மயக்கத்திலேயே முகிலனை மருத்துவமனையில் இருந்து அழைத்துச்சென்றனர். தென்றல் தாங்கள் இருந்த வீட்டுக்குச் சென்றாள். அங்கே எங்கு பார்த்தாலும் அவன் நிற்பதாகவே அவளுக்குத் தெரிந்தது. அவளை அங்கேயே இருக்க விடமாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
தன்னுடைய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டாள்.
கவனமாக அவர்கள் தனக்கு கொடுத்த பணத்தை அங்கேயே வைத்தாள்.
ஆனால் வள்ளியம்மை கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம் செய்துகொண்டதால் மனைவி என்ற உரிமையில் அந்த சொத்தின் மீது உரிமை கோர முடியுமே. அப்படியிருக்கையில் சில லட்சங்களுக்காக அவள் சென்றுவிட்டாள் என்று அவர்கள் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை.
நம்பிக்கை அளித்தேனே. மகன் குணமானதும் அவனிடம் பேசுவதாக வாக்கு கொடுத்தேனே. இப்போது நான் என்ன செய்வேன்.