இரண்டு நிமிடங்களில் அங்கே வந்த சரண்யா மற்ற நாட்களை விட இன்னமும் சோர்ந்து போய் தெரிந்தாள்...
அவளிடம் இருந்த மாற்றம் மித்ரன், மைத்ரேயி இருவருக்குமே தெரிந்தது... இருவருக்குமே ‘ஏன்’ என்ற கேள்வி எழுந்தது...
ஆனால் இருவருமே அப்போது அதைக் கேட்கவில்லை...
சுரத்தே இல்லாமல்,
“குட் மார்னிங் மேடம்...” என்றாள் சரண்யா...
அவளுக்கு பதிலாக ஒரு ஸ்மைலை கொடுத்து விட்டு, மித்ரன் நின்றிருந்த பக்கம் பார்த்தாள் மைத்ரேயி....
மைத்ரேயிக்கு நேர் எதிரே இருந்த சுவரில் சாய்ந்த படி நின்றிருந்த மித்ரனை அதுவரை கவனிக்காமல் இருந்த சரண்யா, மைத்ரேயியின் பார்வையை கவனித்து திரும்பி பார்த்தாள்...
மித்ரனை அங்கே பார்த்து திகைத்துப் போனாள்...
இவன் இருக்கும் போது எதற்கு மைத்ரேயி அவளை இங்கே வர சொன்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பதை அவனால் உணர முடிந்தது...
அந்த மாற்றத்தின் மீது அவனுக்கு சின்னதாக சந்தேகம் இருந்தாலும்... அவன் அருகே இருந்த ஃபைலில் இருந்த அவளின் புகைப்படம்... அவளிடம் கொடுக்க என கொண்டு வந்து, கொடுக்காமல் அவன் திருப்பி எடுத்து வந்த அந்த புகைப்படம்... அவனுக்கு உண்மையை உரக்க, மிக உரக்க உரைத்தது...!