“அவங்க இரண்டு நாள் லீவ் சொல்லி இருக்காங்க மேடம்... ஃபீவர்ன்னு போன் செய்து சொன்னாங்க...” என்றான் விஜய்.
“ஓகே...” என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாலும் மைத்ரேயிக்கு சரண்யாவை பற்றிய கவலை மனதுள் இருந்துக் கொண்டே இருந்தது...
தன்னுடைய அறைக்கு வந்த உடன், சரண்யாவின் செல் நம்பரை தேடி எடுத்து அழைத்தாள்...
“ஹலோ...” என்ற புதிய குரல் கேட்டது...
“நான் மைத்ரேயி பேசுறேன்... சரண்யா இருக்காங்களா?”
“ஓ, மைத்ரேயி, நீதானாம்மா... நான் சுலோச்சனா.... சரண்யா வீட்டு பக்கத்தில இருக்கேன்...”
“நீங்க தானா...!!! அதானே குரல் தெரிஞ்ச மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்... சரண்யாவுக்கு ஃபீவர்ன்னு சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கா?”
“ஜுரம் குறையலைம்மா... ஜாஸ்தியா தான் இருக்கு... பக்கத்தில இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}