(Reading time: 14 - 27 minutes)

“ஹ்ம்ம்... நாம சும்மா இருந்தாலும் நம்ம கண்ணு காட்டிக் கொடுக்குதே.. ?”

“என்ன சொல்றீங்க..?”

“என்னதான் நேத்திக்கு நாம கஷ்டப்பட்டு பட்டும் படாமலும் நடந்துகிட்டாலும், நம்ம கண்ணு அது வேலைய கரெக்டா செஞ்சுருச்சு.. என் கண்ணு உன்னை தவிர வேற எந்த பக்கமும் போக மாட்டேன்னு அடம் பிடிக்க, அத எங்க அம்மா கண்ணு கண்டுபிச்சு அவங்க கிட்டே போட்டு குடுத்துருச்சு..”

“ஹப்பா.. அவங்களே கண்டு பிடிசிட்டாங்கன்னு சொல்றதுக்கு எவ்ளோ பெரிய வசனம்.. நீங்க கிளாஸ்லே பாடம் எடுத்து எடுத்து.. எங்கிட்ட பேசறப்பவும் வாத்தியார் கணக்காதான் பேசுறீங்க..”

“ஹலோ.. ஸ்டுடென்ட் ட்யுப் லைட்டா இருந்தா வாத்தியார் பெரிசா லெக்சர் தான் கொடுக்கனும்மா .. “

“ஹ்ம்ம்.. நான் ஒன்னும் மக்கு இல்லை..’ என்று சிணுங்க, அந்த சிணுங்களில் அவன் மனம் விழுந்தது.

“ஹேய்.. விழி டார்லிங்.. நீ இப்படி எல்லாம் சிணுங்கினா, என் கற்பனை எங்கெல்லாமோ போகுதே.. அப்புறம்  இப்போவே உன்னை தூக்கிட்டு வந்து தாலி கட்டி குடும்பம் நடத்த ஆரம்பிச்சுருவேன்.. எப்படி வசதி..?”

“அட.. இது எல்லாம் கேட்டுதான் செய்வாங்களா? “

“ஒய்.. அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னு தைரியம் தானே உனக்கு.. ?” என்று வினவ, இருவரும் சற்று நேரம் சிரித்தனர்.

“எல்லாம் சொன்னீங்க சரி.. அம்மா என்ன சொன்னங்க ?”

“ஹேய்.. அம்மாவை பொறுத்த வரைக்கும் டபுள் ஓகே.. “

ஓஓ என்று கத்தி விட்டாள் மலர். அவளின் சந்தோஷ குரலை கேட்ட செழியன் சிரித்துக் கொண்டே

“ஹேய்.. மலர் மெதுவா.. மெதுவா” என அதன் பிறகே தான் இருக்கும் இடம் உணர்ந்து சற்று குரலை தனித்தாள்..

“மலர் மேடம்க்கு செம குஷி போலே..”

“இல்லியா பின்னே.. எனக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிச்சு இருந்தது.. ரொம்ப சாப்ட் அண்ட் கேரியிங் பெர்சன்.  பார்த்த கொஞ்ச நேரத்துலேயே அத உணர முடிஞ்சுது.. உங்க அம்மாவோட செயல்கள் எல்லாம் பார்க்கிறப்போ, எங்க அம்மா உங்க அம்மா ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தது. கல்யாணமாகி உங்க வீட்டுக்கு வரும்போது எனக்கு எங்க அம்மாவ மிஸ் பண்ற பீல் வராம பார்த்துக்குவாங்கன்னு தோணிச்சு.. ஆனா அவங்களுக்கு என்னை பிடிக்குமான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது.. நீங்க அம்மா ஓகே சொன்னதா சொல்லவும் எனக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியல..”

“ஹ.. ஹ.. உன்னை எப்படி மலர் பிடிக்காம போகும்..? எல்லா விதத்திலும் நீ வெல் குவாலிபை தானே..”

“அப்படி இல்லைங்க.. அவங்களுக்கு தன் பையன் மனைவி இப்படி இருக்கணும்னு ஒரு எதிபார்ப்பு இருக்கும் இல்லியா.. அதோட இன்னும் உங்களுக்கு பொண்ணு பார்கிறதை பத்தி அவங்க யோசிச்சு இருக்காங்களான்னும் தெரியாது.. இந்த நேரத்திலே என்னை உங்களுக்கு ஜோடியா யோசிச்சு இருக்காங்க என்பதே எவ்வளவு பெரிய விஷயம்..”

“அது சரிதான்.. ஆனால் யார் என்ன சொன்னாலும் என் மனைவி நீதான்.. அதை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..”

“நீங்க சொல்ற மாதிரிதான் நானும்.. ஆனால் மத்தவங்களை விடுங்க.. நம்ம பெத்தவங்க முழு சந்தோஷத்தோட நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கனும்.. அதில் அவங்களுக்கு கொஞ்சம் சிணுக்கம் இருந்தாலும், அது நம்ம வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில பாதிப்பு ஏற்படுத்தும்.. அதை தான் நான் விரும்பவில்லை..”

“அதுவும் சரிதான்..”

“உங்க அப்பாக்கிட்ட அம்மா சொல்லிடாங்களா?” என்று மிகுந்த எதிர்பார்ப்போடு வினவினாள்.

அவளின் குரலில் இருந்த ஆவலை கண்டு கொண்டவன், உண்மையை அப்படியே சொல்ல மனமில்லாமல்

“ஹ்ம்ம்.. இன்னும் அப்பாக்கு சொல்லலை.. ஆனால் அவருக்கும் லேசு பாசா தெரிஞ்சு இருக்கும்..”

“ஹ்ம்ம்.. அவருக்கும் என்னை மருமகளா ஏத்துக்க மனசு வந்தா நல்லா இருக்கும் “

“ஹேய்.. அது எல்லாம் கவலைபடாதே.. எங்க அம்மா அப்பாவ கன்வின்ஸ் பண்ணிடுவாங்க.. அதோட அவரும் பிடிவாதக்காரர் அவ்வளவுதான்.. மற்றபடி வில்லன் எல்லாம் இல்லைமா . சோ யு டோன்ட் வொர்ரி..”

“சீ.. நான் ஒன்னும் அப்படி எல்லாம் நினைக்கலை.. எல்லோரும் சம்மதிச்சுட்டா.. பிரச்சினை இல்லாம நாம ஒன்னு சேர்ந்து விடலாமேன்னு நினைச்சேன் “

“எந்த ட்விஸ்ட்டும் இல்லைனா நம்ம காதல் கதை கியுட்டான கதையா இல்லாம மொக்கை கதை ஆயிடாதா “

“ஐயே.. ரொம்பத்தான்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.