தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 25 - ஜெய்
Hi Friends, இந்த முறை ஒரே பேஜ்... என்னை உதைக்க வராதீங்க... ஒரு மாதமாக பெரிய பையன் 11th admission-இல் பயங்கர பிஸி... Entrance Exam , Interview என்று... அவன் விரும்பிய துறை கிடைக்க வேண்டும் என்ற டென்ஷன்... இன்றுதான் அவனின் admission முடிந்தது... கடவுள் அருளால் அவனுக்கு பிடித்த subjects IB படிப்பில் கிடைத்து விட்டது... big relief... so இந்த குட்டியிலும் குட்டியான அப்டேட்டை பெரிய மனது வைத்து படித்து கமெண்ட் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
நரேஷ் பண்ணை வீட்டில் இரு பக்கமும் இருந்த காவலாளிகளை ஏமாற்றி மிகச்சுலபமாக சாரங்கன் அவன் வீட்டினுள் நுழைந்துவிட்டாள்..... ஏற்கனவே ஒரு முறை அந்த வீட்டிற்கு நுழைந்து அவன் வந்திருந்ததால் அவன் நேராக சென்றது அந்த பூஜை அறைக்கே....
அங்கிருந்த ரகசிய அறையைத் திறந்து அனைத்து ஆவணங்கள், நகைகள், பணம் முதலியவற்றை தான் கொண்டுவந்த காமெராவில் வீடியோ ரெகார்ட் செய்துகொண்டு, கூடவே புகைப்படமும் எடுத்துக்கொண்டான்....
அங்கு கிடைத்த ஒரு வங்கி கணக்குப் புத்தகத்தில் ஒரே கணக்கிலிருந்து நிறைய முறை பணம் அனுப்பப்பட்டிருந்தது... அதுவும் லட்சக்கணக்கில்....
அதே எண்ணை வேறு எங்கோ பார்த்த நியாபகம், எத்தனை யோசித்தும் அவனால் நினைவுக்கு கொண்டு வரவில்லை.... அனைத்து ஆதாரங்களையும் திரட்டிய பிறகு பிற அறைகளையும் சோதனை செய்யலாம் என்று மற்ற அறைகளுக்கு சென்று ஆராய ஆரம்பித்தான்....
நரேஷின் வீடு மேலும் கீழுமாக மொத்தம் ஏழு அறைகளைக் கொண்டதாக இருந்தது... இதைத் தவிர சமையலறை, பூஜையறை என்று இருவேறு அறைகள்.... இரவு நேரம் காவலாளிகள் தவிர அனைத்து வேலைக்காரர்களும் வீட்டிற்கு சென்று விடுவதால் வீடு நிசப்தமாக இருந்தது....
கண்டிப்பாக எங்கேனும் காமெரா பொருத்தி இருக்கக்கூடும் என்று அவன் உள்நுழையும்போதே CCTV jammer கொண்டு அங்கு இருந்த காமெராக்களை செயல் இழக்க செய்தான்....
பின் எல்லா இடங்களையும் ஆராய்ந்தபடியே அறைகளுக்கு சென்று சோதனை செய்ய ஆரம்பித்தான்... கீழிருந்த அறைகளில் பூஜை அறைத் தவிர வேறு எங்கும் அவனுக்கு எந்த ஆதாரமும் கிட்டவில்லை.... மாடிக்கு சென்று ஆராயலாம் என்று படி ஏற ஆரம்பித்தான்....
முதலில் நுழைந்த அறை குழந்தைகள் அறையாக இருந்தது... இரண்டாவது அறை விருந்தினர் வந்தால் வந்து தங்கும் அறை... அங்கும் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை... மூன்றாவது அறை ஏற்கனவே அவன் சென்ற முறை வந்தபோது சோதனை செய்தது...
நான்காம் அறையைத் திறக்க அது மிகப் பெரியதாக இருந்தது... இரண்டு சுவர்களிலும் அலமாரி பதிக்கப்பட்டு நடுவில் மிகப்பெரிய கட்டிலுடன் இருந்தது... அது நடிகனின் படுக்கையறையாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த சாரங்கன் அந்த அறையை ஆராய ஆரம்பித்தான்.... அங்கிருந்த அலமாரிகளில் நரேஷ் மற்றும் அவன் மனைவியின் துணிகள் மற்றும் சில சின்ன சின்ன நகைகள் ஒன்றிரண்டு ஆவணங்கள் மற்றும் அவன் நடித்து முடித்த திரைப்படத்தின் ஒப்பந்தங்கள் ஆகியவையே இருந்தன.... இங்கும் பூஜையறையைப் போல் ஏதேனும் ரகசிய திறப்பு இருக்கிறதா என்று தலைகீழாக ஆராய அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை... அவனின் கட்டிலும் மிக உறுதியானதாக இருந்தது.... அதை நகர்த்தி ஆராய தன் ஒருவனால் முடியாது என்பதால் அங்கு கிடைத்த ஆதாரங்கள் வரை எடுத்துக்கொண்டு நரேஷின் வீட்டை விட்டு கிளம்பினான் சாரங்கன்....
இங்கு நரேஷின் பண்ணை வீட்டிற்குள் சென்ற பாரதி, முதலில் உள்நுழைவதற்கே கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆகிவிட்டது... முன்பக்கம் இருக்கும் தோட்டத்தை காவலாளிகளின் கவனத்தைக் கவராமல் கடப்பதற்கே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது... அதைக்கடந்து வீட்டின் அருகில் நெருங்க வாசலிலேயே இரண்டு பேர் காவலுக்கு இருந்தார்கள்... மரங்களின் ஊடாகவே நடந்து பக்க வழிக்கு செல்ல அங்கிருந்த அனைத்து அறைகளில் ஜன்னல்களுமே பூட்டப்பட்டிருந்தது...
காவல் செய்பவர்களின் கவனத்தைக் கவராமல் அதைத் திறப்பது கடினம் என்பதால் மாடி வழியாக செல்வதே சிறந்தது என்று பைப்பை பிடித்துக் கொண்டு மளமளவென்று மாடிக்கு ஏறினாள்... அவளிருந்த பகுதி இருளடைந்து இருந்ததால் அங்கு காவலுக்கு இருப்பவர்களால் அவளைக் காண முடியவில்லை... மாடியில் இருந்த கதவு வழியாக மெல்ல உள்நுழைய அப்படிகள் முதல் தளத்திற்கு சென்றது... அங்கிருந்த அறைகளில் ஒன்றைத் திறந்த பாரதி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்....
தொடரும்
{kunena_discuss:1100}