இப்போது பிரபாகர் குழந்தையைப் பார்க்கும் முன்னே மனைவியைத்தானே பார்த்தான்.
அந்த நேரத்தில் அவளோடு துணையாக இருக்க முடியாமல் போயிற்றே.
அவனை மேலும் வருந்த விடாமல் தென்றல் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.
குழந்தையைப் பார்க்கும் ஆவலில் பூமிகாவும் குதித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் முன்புறம் ஏறிக்கொள்ள கையில் இருந்த சாமான்களை காரணம் காட்டி தென்றல் பின்பக்கமே அமர்ந்துகொண்டாள்.
மருத்துவமனைக்குள் நுழைந்த போது நித்திலாவின் புகுந்த வீட்டினர் வந்திருந்தனர்.
முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நின்றிருந்த அவர்கள் அவளைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து நன்றி சொன்னார்கள்.
சாதாரண விசயத்தை அவர்கள் ஏதோ பெரிதுபடுத்துவதுபோல் அவளுக்குத் தோன்றியது.
அவள் அவளது கடமையைத்தானே செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுபோல் கண்டவன்தானேம்மா. இப்ப ஏன் என்னை விட்டு விலகிப்போறான்னே எனக்குத் தெரியலைம்மா. அவளுக்கு என்னோட அன்றைய நிலைமை தெரியும்தானே. அப்புறம் அவள் என் மேல் கோபம் கொண்டால் அது சரியாம்மா?”
“அவ உன்மேல் கோபமா இருக்கிற மாதிரி தெரியலைப்பா. அவளுக்கு ஏதோ பயம்.”
“என்கிட்டே எதுக்கும்மா பயம்?”