“என்கிட்டே கேட்டா எனக்கு என்னப்பா தெரியும். நீதான் அவகிட்டே பேசி அவளுக்கு உன்னைப் புரிய வைக்கனும்.”
அவர் எளிதாகச் சொல்லிவிட்டார். அவள்தான் அவனைக் கண்டாலே விலகிப்போகிறாளே.
வள்ளியம்மை தென்றலுக்கும் மருத்துவமனையில் இருக்கும் நித்திலாவின் குடும்பத்தாருக்கும் சமைத்து அதை முகிலனிடம் அனுப்பி வைத்தார்.
நித்திலாவிற்கு பத்தியச் சாப்பாடு மூன்றாவது நாள்தான் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் அவளுக்குச் சாப்பாடு. அதனால் அவளுக்கு எளிதாக செரிக்குமாறு இடியாப்பம் பால் என்று கொடுத்துவிட்டார்.
“அம்மா!” என்று பூமிகா ஓடிவந்து தென்றலை அணைத்துக்கொண்டாள்.
இப்போதுதான் நித்திலாவை மருத்துவமனையில் இருந்து அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவளுக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு இருப்பியா? அது மாதிரிதானே பாப்பாவும். அம்மாவை விட்டுட்டு எப்படி இருக்க முடியம்?”
குழந்தை பெரிதாக யோசித்தாள்.
“அப்படின்னா நீங்களும் இங்கேயே இருந்துடுங்க.”
“அப்புறம் மாமா பாவம் இல்லையா?”
குழந்தை எதுவும் பேச முடியாமல் நின்றது. அதைப் பார்க்கவே பாவமாக இருந்தது.