தனது அன்னைக்கு அருகில் வந்து அவரை அணைத்து ஆறுதல் படுத்திய சந்தனபாண்டியனின் கண்களும் தான் கலங்கி போயின..,தனது தங்கையின் வாழ்கையை நினைத்து..
அங்கு அன்னமோ வரபோகும் புது வரவை நினைத்து மகிழ்ச்சியோடு மருத்துவமனையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாள்.
வேந்தனோ கௌதமுக்கு போட்டியாக செய்யவதாக நினைத்து தனது வாழ்கையின் தேவதையை காண சென்றான் வேந்தன் என்ற மதிவேந்தன்.(இவர் தாங்க ஹீரோ...)
மருத்துவ மனைக்கு முதலில் சென்றவளது கணகளில் விழுந்தது ,அறையின் வெளியே குறுக்கு நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான் அவளது மாமா கதிரேசன் தான்
“மாமா..” என்று அவளது . குரலை கேட்டவன்
“அன்னம் வந்துட்டியா..,எனக்கு தேவதை பிறந்திருக்கா...”என்று அவன் கூற
“அப்படியா மாமா,சந்தோசம் மாமா,குழந்தைய காமிச்சாங்களா..”என்று அவள் அவனை கேட்க
அதற்குள் கௌதம் “அப்பா என்ன பாப்பா..”என்று கேட்க
“உனக்கு தங்கச்சிபாப்பாடா..”என்று அவனது கன்னத்தை தடவி கூறினார் கதிரேசன்.
அவனது தலையை தடவிக் கொடுத்தால் அன்னம்.
அதற்குள் ஒரு வெண்பூத்துண்டில் சுற்றப்பட்டு ரோஜாப்பூக்குவியலாய் நம் கதையின் நாயகியை தூக்கி வந்தார் நர்ஸ்.
அவர் குழந்தையை நீட்ட,”அன்னம் குழந்தையை வாங்கு..”என்று கதிரேசன் கூற
“மாமா..”என்று அவள் அவனை தயக்கத்துடன் அழைக்க
“அன்னம் கதிர் பொறந்தப்ப சொன்னதுதான்..,இது உன்னோட குழந்தை இதை நீ தூக்க மாட்டியா..”என்று அவன் அவளிடம் கூற
மறுபேச்சு எதுவும் பேசாமல் குழந்தையை வாங்கிக் கொண்டாள் அன்னம்.
தனது குட்டிக்கண்களை முட்டி மோதி திறக்க முயன்றுக் கொண்டிருந்தால் அந்த குட்டி தேவதை.
அந்த குழந்தையை கைகளில் வாங்கிய நொடி அன்னதின் மனதில் ஒரு வித நிறைவு அவள் வலி எடுத்து பெறவில்லை, ஆனால் அவளது மனதில் அவள் பெற்றதை போல் ஒரு நிறைவு...
தனது பெரியம்மாவின் கைகளில் குட்டி கால்களை ஆட்டிக் கொண்டிருந்த தனது தங்கையை பார்க்க கௌதமிற்கு ஆசை வந்தது.
“பெரியம்மா,எனக்கு காட்டுங்க..” என்று கூற
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவனுக்கு காண்பித்தால் அன்னம்.
தனது நாக்கை துறுத்திக் கொண்டு இருந்த அந்த குட்டி தேவதையை பார்த்த கௌதமிற்கு தனது குட்டி தங்கையைப் பார்த்த கௌதம் அவளைப் பார்த்து துள்ளி குதித்தான்.
அவளது கன்னங்களை தனது பிஞ்சு விரல்களால் தொட்டான்.
“பாப்பாவ தொடாம பாருடா..”என்று கதிரேசன் கூற
தனது அத்தை கையில் இருந்த அந்த குட்டி மலரை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மதிவேந்தன்.
கௌதம் தொட்டதும் அவனுக்கும் அந்த குட்டியை தொடவேண்டும் என்ற எண்ணம் வந்தது அவனுக்கும்,ஆனால் தனது மாமா கௌதமை பார்த்து சொன்னதை காதில் வாங்கியவன் அவளை தொடும் ஆசையை கைவிட நினைத்தான்.
அவனது அருகில் வந்த கௌதம்,”வேந்தா என்னோட தங்கச்சி பாப்பாவ பார்த்தியா..,எவ்வளவு அழகா இருக்கு..”என்று அவன் கூற
வேந்தனுக்கோ அவன் என் தங்கச்சிபாப்பா (இப்பவே..பொசசிவ்னஸ்...) என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அத்தை நான் இந்த பாப்பாவ தொடட்டா...”என்று வேந்தன் கேட்க
“தொட்டு பாருடா..,என்னோட மருமகனே..” என்று அவள் சொல்ல
“அவன் என் பாப்பாவ தொடக் கூடாது...”என்று கௌதம் கூற
“டேய் மவனே..,இப்படியெல்லாம் சொல்லக்கூடாது..,என்னோட மருமகனுக்கு இவ மேல இல்லாத உரிமை இங்க யாருக்குமே இல்ல..”என்று அவள் கூற
“அப்படி சொல்லுடி என்னோட மருமகளே..”என வந்தார் கதிரேசனின் அம்மா சாந்தா.அன்னத்தின் கைகளில் இருந்த தனது பேத்தியை அவரது கைகளில் வாங்கி அவனுக்கு அருகில் காண்பித்தார் அவர்.
“நீ தொடுடா என்னோட பேராண்டி..”என்று அவர் கூற
அவன் அந்த குட்டிபெண்ணின் பாதங்களை தீண்டினான்,அவனது தீண்டலின் கூச்சத்தில் தனது கால்களை இழுத்துக் கொண்டாள் அந்த தேவதை.
அதைப் பார்த்தவனுக்கு இன்னும் அவளை சீண்டிப் பார்க்க தான் ஆசை வந்தது.
அவன் அவளது அடுத்த காலிலும் தனது தீண்டலை தொடர தேவதை அவள் தான் நெளிய ஆரம்பித்தாள்.