மனைவி எதற்கோ பயப்படுகிறாள் என்று புரிகிறது. அதனால்தான் நான் துணையாய் இருக்கிறேன் என்று சொல்லாமல் செயலால் புரிய வைக்க முயற்சி செய்கிறான். அது அவளுக்குப் புரிகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை.
மறுநாள் காலை.
தனக்குப் பரிமாற வந்த தாயை பார்வையால் தடுத்துவிட்டான் முகிலன். அவருக்கும் புரிந்து வேலையைக் காரணம் காட்டி சென்றுவிட்டார்.
போகும்போது தென்றலை அழைத்தார்.
“என்னம்மா?” வந்து நின்றவளை ஏறிட்டுப்பார்த்தார்.
அவள் நல்லவள்தான். இப்படி ஒதுங்கி நடக்கிறாள் என்றால் அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இந்த விசயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது. மகன்தான் செய்ய இயலும். அவன் ஏதாவது உதவி கேட்டால் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
கும்போது அவளுக்கு வருணாய் தெரிகிறான். ஆனால் பேச்சு நடத்தை எல்லாம் அவனை அந்நியனாய் காட்டுகிறது. முன்பு அவளுக்குத் தெரிந்த வருண் குழந்தை மனம் கொண்டவன்.
கணவனைக் கூப்பிடாமல் மகளை அழைத்தாள் தென்றல்.
அவளது அந்த அழைப்பில் கண்களைத் திறந்தான் முகிலன். எதுவும் பேசாமல் தேநீரை நீட்டினாள்.