அவனும் வாங்கிப்பருகினான்.
“சாயங்காலம் நாம் கோயிலுக்குப் போயிட்டு வரலாம்.”
அவள் மௌனமாய் தலையசைத்தாள்.
நேரே வள்ளியம்மையிடம் வந்து நின்றாள்.
“என்னம்மா?”
“அம்மா! அவர் சாயங்காலம் கோயிலுக்குப் போகனும்னு சொன்னார்.”
“போயிட்டு வாங்க.”
“நீங்க.”
“நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டார்.
அன்று மாலை பூமிகா உற்சாகத்துடன் கோயிலுக்குக் கிளம்பினாள்.
அவளது உற்சாகம் முகிலனுக்கும் தொற்றிக்கொண்டது.
காரில் ஏறிக்கிளம்பினர். கோயிலில் அர்ச்சனை பண்ணிவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். தேவதை போன்ற மகளுடனும் மனைவியுடனும் நடந்து சென்ற போது மற்றவர்கள் பார்ப்பதையும் கண்டவனுக்குப் பெருமையாக இருந்தது.
செல்லில் யாருடைய அழைப்போ வர எடுத்துப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சரிபார்த்து அந்த முதியவருக்கு ஊசி போட்டுவிட்டாள்.
மறுநாளும் போட வேண்டியிருக்கும் என்று அவர்கள் சொல்ல தானே வந்துவிடுவதாக சொல்லிவிட்டு வெளியேறியவள் பின் தங்கினாள்.
அவள் முதலில் வந்துவிட்டாள். பின்னே முகிலன் வந்துகொண்டிருந்தான். அவள் பின்னடைந்த வேகத்தில் அவன் மீது மோதிக்கொண்டாள்.