“வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா…”
பாட்டு முடிந்த நேரம் அங்கிருந்த அனைவரின் கரகோஷத்தில் சுயநினைவு பெற்றவள் என்ன செய்வதென தெரியாமல் தவிக்க நண்பர்கள் அனைவருமாய் மணமக்களோடு போட்டோவிற்காக வர அவர்களோடு சேர்ந்து கொண்டாள்..
ரகுவோ பித்து பிடித்தவனாய் மனதினுள் அலைபாய்ந்து கொண்டிருந்தான்..தன்னவளின் நெருக்கம் அவள் பார்வை அந்த ஸ்பரிசம் அனைத்தையும் தாண்டிய அவளின் ப்ரத்யேக வாசனை அவனை மொத்தமாய் கிறங்கடித்திருந்தது..பேருக்காய் பேசி இரண்டொரு வாய் சாப்பிட்டு முடித்து கிளம்ப தயாராக ஹரிணி அனைவரிடமும் கூறிவிட்டு அவனோடு கிளம்பினாள்..மதிய நேரம் என்பதால் வெளியே ஆள்நடமாட்டமே இல்லாமல் இருக்க சட்டென அவள் கைப்பிடித்தவன் வேகமாய் இழுத்து ஹாலிற்கு பின்புறம் நிறுத்தினான்..
“நந்தா என்ன பண்றீங்க!!!யாராவது…”
அதற்குமேல் அவள் பேச இடமில்லாமல் போனது..ஒவ்வொரு முறையும் அவனின் ஆளுமை அதிகரித்ததேயன்றி குறையவில்லை என தோன்றியது பெண்ணவளுக்கு..வெற்றிடையில் அவன் விரல்கள் மேலும் முன்னேற இன்னுமாய் சுவரோடு ஒட்டினாள் அவள்..வேகமாய் அவன் ப்ளேசரை பிடித்து பின்னே தள்ளியவள் இரண்டடி வெளியே வந்து நிற்க வழக்கம்போல் என்ன சொல்வதென தெரியாமல் அவன் நின்றான்..
ஹணி…என வாய் திறந்தவன் சிவந்திருந்த அவள் உதட்டை பார்த்து வாயை மூடிக் கொண்டான்..அவன் பார்வையை கண்டவள் தன் உதட்டை பிதுக்கி பார்க்க நன்றாகவே சிவந்திருந்தது..அதை ஈரப்படுத்தியவாறு முன்னே நடந்ததவளை தடுக்க தோன்றாமல் அவளோடு நடக்க ஆரம்பித்தான்..
சில நொடிகள் அவனின் அவஸ்தையை ரசித்தவள் பின் மெதுவாய்,
“நீங்க கொரியன் ட்ராமாஸ் நிறைய பாப்பீங்களோ???”
“வாட்??இப்போ ஏன் இதை கேக்குற ஹணி??”
லேசாய் முகம் சிவந்தவள்,இல்ல எப்பவுமே தடாலடியாவே ரொமான்ஸ் பண்றீங்களே அதான் கேட்டேன்..என முகத்தை திருப்பிக் கொள்ள,
“அடிப்பாவி பாக்குறது ஊமைக் கொட்டான் மாதிரி இருந்துட்டு இவ்ளோ பேசுறியா???அப்போ நீ நிறைவே பாத்துருக்க???”
“ஹே ச்சச்ச அப்படியெல்லாம் இல்ல..என் ப்ரெண்ட்ஸ்லா அடிச்சுப்பாங்க அந்த கேரக்டர்ஸ்க்காக சோ அப்படி என்னதான் இருக்குனு பாப்போமேநு ஒரு வீடியோ பாத்தேன் அவ்ளோதான்..”
“ம்ம் ரொம்பவே தேறிட்ட போ..”
“பின்ன உங்களை எப்படி சமாளிக்குறதாம்???”
“ஹணி பேஸிகலி நா ரொம்ப ரொம்ப குட் பாய் தான் ஆனா ஏனோ உன்கிட்ட பேட் பாயா தான் இருக்க தோணுது “,என்றவாறு அவள் கைகோர்த்து நடக்க,தன் இடக்கையால் அவன் கையை பற்றியவாறு அவளும் நடந்தாள்..
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்படி பாவமா முகத்தை வச்சுக்க வேண்டீயது”, என அவனுக்கு கேட்குமாறு முனக,
பற்கள் தெரிய சிரித்தவன்..”லவ் யூ டீ ஏன் என்ன உனக்கு பிடிச்சுருக்கு??”
“ம்ம் என்ன திடீர்நு???”
“பரவால்ல சொல்லு என்னை ஏன் லவ் பண்ற???”
“நாதான் சொல்லிருக்கேனே நந்தா என் அப்பா அண்ணாக்கு அப்பறம் எனக்கான ஒரு ஆண் சிநேகிதம் நீங்க தான்..அதுவும் போக நீங்க எல்லோரோடையும் சகஜமா பழகுறதுதான் மெயின் ரீசன்..பணக்காரன்ங்கிற ஈகோ இல்லாம ரொம்பவே இயல்பா நடக்குறது எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம்..மத்தபடி பெருசா ஒண்ணுமில்ல”, என அவனை ஓரப்பார்வை பார்க்க,
“ பார்ராராரா..ம்ம் ஹணி..”
“சொல்லுங்க நந்தா..”
“ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் சாரி..”