அப்படி பட்டவ என்ன கல்யாணம் பண்ணிட்டதுக்கப்புறம் ஒருநாளும் புகழை நினைத்துகிட்டே என்கூட வாழுறமாதிரியொரு துரோகத்தை பண்ண மனசு வராது.. என்ன, என் மேல பயங்கர கோபத்தில் இருப்பா.. பரவால.. அவ கோபம் காலபோக்கில் மறைந்திடும்.. என் காதல் அவளை மாற்றி என்னை அவள் கணவனாய் ஏத்துப்பா.. அதுக்கு நான் வருஷ கணக்கில் காத்திருந்தாலும் சரி..”
“நீ மித்ராகிட்ட வற்புறுத்தி உன் காதலை அடைய முயற்சி செய்யுற. இதனால் வெறுப்பு தான் வரும்.. காதல் வராது.. அவளோட காதலை நீ என்னைக்கும் பெற முடியாது.. அது ஏன் உனக்கு புரியல..”
“எனக்கு புரியலையா.. ஏன்..ஏன்..ஏன்... எனக்கு தல் வரக்கூடாதா.. அது வெற்றி அடைய கூடாதா... என்னை மித்ரா கல்யாணம் பண்ணினா வாழ்க்கை முழுவதும் என் கூட வாழ்ந்து தான் ஆகணும்.. அது அவளுக்கு பிடிக்காத கணவனா இருந்தாலும்..! எனக்கு மித்ரா தான் முக்கியம்.. அவளுக்காக நான் எதையும் செய்வேன்.. ஆனா அதுக்காக என் காதலை விட்டு கொடுத்துட்டு அவளை காலம் முழுசும் நினைச்சுட்டு வாழ என்னால முடியாது.. எனக்கு இந்த தியாகி பட்டம் எல்லாம் வேணாம்.. நான் கொடுமைக்கார வில்லனாவே இருந்துட்டு போறேன்.. ஐ டோன்ட் கேர்.. எனக்கு மித்ரா என் மனைவியா என் கூடவே இருந்தா போதும்...” என்றவன் அவளிடம்,
“இன்னும் கொஞ்ச நேரத்தில் மித்ரா இங்கு வருவா. அவகிட்ட சொல்லி புரிய வை.. இல்லைனா உன்னை காரணம் காட்டியே அவள் கழுத்தில் தாலி கட்டி இந்த register மேரேஜ் applicationல அவ சைன் வாங்க முடியும்..” என்றவன் அங்கிருந்து சென்றான்..
அம்மு தன் மடத்தனத்தை எண்ணி கோபப்பட்டாள்.. பின் அமைதியாக இங்கிருந்து தப்பிக்க யோசித்தாள்.. ஆனால் அதற்கு தான் எந்த வழியும் கிடைக்க வில்லை.. அதற்குள் மித்ரா அங்கு வந்து சேர்ந்தாள்..
மித்ரா மிகவும் பயந்த நிலையில் இருந்தாள்.. தனது போனில் வந்த தகவலை கண்டு அதிர்ந்து விரைவாக அங்கு சேரவும் பரத் அவளிடம் வந்தான், அவனை கண்டவள் அதிர்ந்து..
“பரத்.. நீயா?..”
“யெஸ்.. நானே தான்.. வாங்க நாம் இப்போ அம்முவை பார்க்கலாம்..”
“எனக்கு தெரியும் டா.. நீ விசம்னு.. அம்மு எங்க..” என அவன் சட்டையை பிடித்து கேக்க,
“கூல் பேபி.. கம்..” என்றவன் அவள் கையை விடுவித்து அவளை அம்முவின் அறைக்கு கூட்டி செல்ல அம்முவை கண்ட மித்ரா அவளை கட்டி கொண்டு அழுதாள்... அப்போது தன் தலை முடியில் மறைத்து வைத்து இருந்த ஒரு சிறு கத்தியை எடுத்து பிறர் அறியா வண்ணம் அவள் கயிறுகளை அறுக்க ஆரம்பித்தாள்.. அப்போது பரத்,
“போதும் மித்ரா.. இங்கே வா.. அம்மு என்னனு சொல்லுவா..” எனவும், அவனருகே வந்தவள் அம்மு கூறியதை கேட்டு திகைக்க திடிரென சத்தம் வந்தது..
போலிஸ் தான்.. ஏற்கனவே அம்முவின் பாதுகாப்பிற்காக அமைக்கபட்டிருந்த போலீஸ் டீம் அம்மு கடத்தியதும் யாரும் அறியா வண்ணம் பின் தொடர, பிறகு அங்கு சமயம் பார்த்து என்ட்ரி கொடுக்க ஆடி போனான் பரத்..
போலீசை கண்டதும் பெருமூச்சு விட்டனர் அம்முவும், மித்ராவும்.. பின் இருவரும் வெளியே வந்து அங்கிருந்து மித்ராவின் காரில் ஏறி வெளியே செல்ல முயற்சிக்கும் போது பரத் அங்கிருந்து தப்ப முயற்சித்தான்..
அம்மு மித்ரா காரில் சென்று கொண்டிருக்க, அவர்களை வேகமாக பின் தொடர்ந்தது ஒரு வண்டி.. அது இவர்கள் காரின் பின்னே வேகமாக மோத அதை கண்டு அதிர்ந்தனர் இரு பெண்களும், அம்மு தான் டிரைவ் செய்தாள், அதனால் வேகமாக ஓட்டினாள்.. ஆனால் நாம் நினைப்பது எதுவும் நடந்து விடுவதில்லையே.. அம்முவின் கார் accident ஆனது...
மித்ரா பலத்த காயங்களுடன் icuவில் சேர்க்கப்பட்டாள்.. அம்முவுக்கும் கை கால்களின் சில அடிகள் பட்டு உயிர் தப்பித்தாள்.. ஆனால் மித்ராவின் நிலை தான் பரிதாபமானது.. அம்முவுக்கு ஒன்றும் புரியவில்லை.. பின் தெளிவு வந்தவள் விக்ரமுக்கு கால் செய்து விவரத்தை கூற அவன் பதறியடித்து ஓடி வந்தான்.. வந்தவன் அம்முவை பார்த்து அதிர்ந்தான்.. அவன் கை கால், நெற்றியில் கட்டு போடப்பட்டு இருந்தது..
“என்னாச்சு அம்மு.. எப்படி நடந்தது..” என அமைதியாக கேட்டவன் பின், “நீ நல்லாவே வண்டி ஓட்ட மாட்டியா.... எப்போதும் இப்படி தான் accident பண்ணுவியா?” என கோபத்துடன் கேட்க,
“இல்ல மாமா நான் வேணும்னே ஏதும் பண்ணல..” என்றவள் ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் சொன்னாள் பயத்தோடே....
முழுவதும் பொறுமையாக கேட்டவன் அவள் சொல்லி முடித்ததும் அவள் கன்னத்தில் பளாரென அறைந்தான்...
“நீ இப்படி தான் இருப்பியாடீ.. எப்ப பாத்தாலும் உன்னோட ஒரே பிரச்சனை.. என்னை கொஞ்ச நாளாவது நிம்மதியா இருக்க விடுறயா.. எப்போதும் பிரச்சனை.. பரத் பத்தி என்கிட்டே ஏன் சொல்லல..”
“இல்ல மாமா நான்...”
“நீ எதும் சொல்லாத.. வெறுப்பா இருக்கு.. அவனை பத்தி ஏற்கனவே மித்ரா வாரன் பண்ணியும் நீ கேக்கல.. அப்படினா வேணும்னே செஞ்சிருக்க.. மித்ராவை பழி வாங்க இப்படி எத்தன நாளா ப்ளான் போட்ட??..” என வார்த்தையால் அவள் மனதை நோகடித்தான்..