“நீ அவளை உயிர் தோழினு சொல்லிக்கிற.. ஆனா நீதாண்டி அவளோட முதல் எதிரி.. அப்போ போலீஸ் மட்டும் வருலேன்னா பரத்தை கல்யாணம் பண்ணிக்கறத்துக்கு அவ செத்துருப்பா, அவள் என் உயிர்னு தெரிந்தும் நீ அவளை இவ்ளோ பெரிய சிக்கலில் மாட்டி விட்டுருக்க.. நான் உன்னை விரும்பியதுக்கு நல்ல பலன் தந்துட்ட.. உன்னை ஏண்டா லவ் பண்ணேன்னு நான் நினைக்கிறேன்... நீ என் வாழ்கையில் வராமலே இருந்திருக்கலாம்.. இனிமே தயவு செய்து என்னை பார்க்க வராதே, போயிடு.. நான் இனிமே உன்னை பார்க்கவே கூடாது.. இனி என் கண்ணு முன்னாடியே வராதே..” என கோபமாக கூறியவனை கேட்டு அதிர்ந்தவள்,
“ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதிங்க.. மித்ரா கூட நான் இருக்கணும்..”
“எதுக்கு? அவ உயிரை வாங்கவா.. இங்கிருந்து போ...”
“மாட்டேன்..”
“நானே போக வைக்கிறேன்..” என்றவன் அவளை இழுத்து கொண்டு வெளியே சென்றான்..
அதன் பின் பல தடவை மித்ராவை பார்க்க முயற்சி செய்தவள், விக்ரமின் தடையால் பார்க்க முடியாமல் வேதனையுடன் சென்றாள்.. மித்ரா ஒரு மாதத்திற்கு பின் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து விக்ரமிடம் சண்டை போட்டவள், பின் அவனிடம் பேசுவதை விட்டு விட்டாள்.. அதன் பின் 6 மாதம் கழித்து முழுமையாய் குணமானாள்.. இவளின் accident பற்றி அவள் வீட்டிற்கு கூற வில்லை.. அம்முவும் அக்கா அன்புவின் நிலைமை மோசமாக, us சென்றவள், தன் அக்காவை இழந்து பின் அப்பா அம்மாவுடன் சென்னை வந்து, பின் accident ஆகி அவளும் அம்முவும் மட்டுமே தப்பிக்க, பின் விரக்தியில் விக்ரமை வெறுத்தாள்...
தொடரும்
{kunena_discuss:1158}