“அப்படி எல்லாம் பேசக் கூடாது நிஷா... மரியாதை கொடுத்து பேசனும்... சாரி சொல்லு... இப்படி பேர் சொல்லியும் கூப்பிடக் கூடாது... அங்கிள்ன்னு சொல்லு...” என்றாள் சரண்யா கோபமாக...
மைத்ரேயிக்கு சரண்யாவின் கோபம் புதிதாக இருந்தது...
நிஷா தவறு செய்யும் நேரங்களில் கொஞ்சமும் பதற்றமடையாமல், கோபப்படாமல், அவளை சரண்யா சரி செய்ய முயல்வதை பல முறை பார்த்து அதிசயப் பட்டிருக்கிறாள் மைத்ரேயி...!
இன்று ரோல் ரிவர்சல் போலும்!
கோபப் படும் அண்ணன், அமைதியாக பேசுகிறான், கோபமே படாத சரண்யா கோபப்படுகிறாள்...!!!
மைத்ரேயி தனக்குள் யோசனையில் இருந்த நேரத்தில் மித்ரன் நிஷாவை தூக்கிக் கொண்டு மேஜையில் கேக் இருந்த இடத்திற்கு கொண்டு சென்று அவளை அங்கிருந்த நாற்காலியின் மீது நிற்க வைத்தான்....
“ஓகே, நிஷா செல்லம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ளினியின் கண்கள் விரிந்தன..!
நிஷாவின் ஒரு பக்கம் மித்ரனும் மறுபக்கம் சரண்யாவும் நின்றுக் கொண்டிருந்தனர்... சரண்யா நிஷா கையை பிடித்து கேக்கை வெட்ட, மித்ரன் கைதட்டி பாட்டு பாடிக் கொண்டிருந்தான்...
மைத்ரேயி, தன் அம்மாவின் முகத்தில் வந்த பாவங்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள்..