ஆனா ரவி மேல உள்ளது உண்மையான காதல்ன்னும் அவனோட குழந்தையை வயிற்றில் சுமப்பதாகவும் எந்த தப்பும் இனிமேல் செய்ய மாட்டேன் பழைய வாழ்க்கையை விட்டுட்டேன்னு அவ உருகினா எனக்கு ஆத்திரம் வந்தது. அதையும் மீறி அவகூட இருக்க நினைச்சேன். ஆனா ரவியால மூர்க்கமா தாக்கப்பட்டேன். என் கண் காணாத தூரத்திலே அவளைக் கொண்டு போய் வைச்சிகிட்டான் ரவி.
சுப்ரியாவைப் பார்க்காம என்னால இருக்க முடியலை, அப்போ பெங்களூர்லே ஒரு நாட்டியவிழா அதிலே ஆடிய பொண்ணு சுப்ரியா மாதிரியே இருந்தது. அவளை பார்க்கப்போனப்போ தான் அவ அசிஸ்டெண்ட் வினிதாவோட பழக்கம் கிடைச்சது. வினிதா என்கிட்டே மாயாவை அனுப்பறேன்னு அனுப்பறேன்னு கணிசமா தொகை கறந்தா அப்பறம் கொஞ்சநாள்ல அவ என்னை ஏமாத்துறான்னு நினைச்சதும் நான் அவகிட்டே கடுமையா சண்டை போட்டேன், அப்போ ரவி கிட்டேயிருந்து எனக்கு போன், நான் அவளை விட்டாச்சு இப்போ நடுத்தெருவிலே இருக்கா நீ போன்னு இனிமே நான் தொல்லை பண்ணமாட்டேன்னு......! அன்னைக்கு நான் வழக்கம் போல சுப்ரியாவைப் பார்க்கபோனேன். அவ என்னவோ பேசினா எதுவும் என் காதல விழலை ரவிதான் என்னை அனுப்பினான் அவன் உன்னைக் கைகழுவிட்டானான்னு சொல்லி என்னோட பல நாள் வெறியைத் தணிச்சிகிட்டேன். ஆனா அவ மயக்கமாயிட்டா உடனே ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க்கும் போதுதான் வினிதா என்னை மறுபடியும் சந்திச்சா.....! மாயா மறுபடியும் பெங்களுர் வர்றான்னு தெரிஞ்சதும், மாயாவோட உருவத்திலே சுப்ரியாவைப் பார்த்ததும் அவளுக்கும் ஒரு ஐடியா வந்தது. என் ஒரு ஆளுமைக்கே தாங்காத சுப்ரியாவை விட ஆரோக்கியமான மாயா மேல ஆசை தாவுச்சு. தகுந்த சந்தர்ப்பத்துக்காக காத்திட்டு இருந்தோம். அந்த ராத்திரியும் வந்தது. என்னோட ஆஸ்தான டிரைவர் ஒருத்தனோட நான் மாயா தங்கியிருந்த அறைக்குப் போனேன்.
மாயா வருவாள்
{kunena_discuss:1142}