“வாடாம்மா சாப்பிடலாம்.”
மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சிறியவர்கள் இருவரின் கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை வனிதாமணிக்கு.
ரவிச்சந்திரன் தன்னுடைய காரில் ஏறிக்கிளம்ப மகேந்திரனின் காரில் ஏறி முன்சீட்டில் ஏறி அமர்ந்தாள் சாருலதா.
மகேந்திரன் அமைதியாக வந்தான். என்றுமே அவன் கலகலப்பாகப் பேசியதில்லை. அவன் மட்டும் யுகேந்திரன் போல் கொஞ்சம் ஜாலியானவனாக இருந்திருந்தால் எனக்கு இந்த அளவு கஷ்டம் இல்லையே.
ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
ஆனால் யுகேந்திரன் ஜாலியான பேர்வழியாக இருந்தும் அவர்களுக்கு என்ன பிரயோஜனம்?
தனது தாயிடம் பிரியமானவனாக இருந்து தொலைத்ததால் அவரிடம் போய் சொல்லிவிட்டானே. அதன் பிறகுதான் அவளால் முன்போல் இங்கே வந்து செல்ல முடியல்லை. ஆராயும் நோக்கோடு தான் அவளைப் பார்க்கிறார் வனித
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“அத்தை. நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க. அவனுக்கு அவனோட அண்ணன் தன்னோட இயல்பா பழகலைன்னு ஒரு வருத்தம் இருந்துட்டேயிருக்கு. அதான் வேணுமின்னே வம்பிழுக்கிறான்.”
“எனக்கும் தெரியும்மா.”
“இப்பக்கூட தன் அண்ணனை நினைச்சுதான் உன்னை அழைச்சுட்டு வந்திருக்கான்.”
“சொன்னான் அத்தே.”