ஐயோ அடுத்து இப்போ யார் என்ற எரிச்சலுடன் எட்டி பார்க்க ,உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தது செந்தில் .
இரு கைகளிலும் இரண்டு பெரிய கட்டை பை இருந்தது !
அவள் அவசரமாக சென்று கதவை திறந்து பைகளில் ஒன்றை வாங்கி கொண்டாள் .
''ஏதேது அதிசயமாக இந்த பக்கம்'' என்று ஆரவாரமாக வரவேற்றாள் ,உண்மையில் அவனை பார்க்க சந்தோசமாக தான் இருந்தது .
அத்துடன் தான் செய்ய போகும் டிபன் தின்று பார்க்க ஒரு பலி ஆடு ,வாரே வா ,வந்து வசமாக சிக்கினாய் என்று நினைத்துக்கொண்டு மறைக்காமல் அதை சொல்லி அவனை கலாய்க்க ..
''தோடா ,சில் வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது ,பாரு எதுக்கு ஊரு விட்டு ஊரு இவ்ளோ பெரிய பையை சுமந்து வந்திருக்கேன்னு நினைக்கிற ,பூராவும் அம்மணி திங்கறதுக்கு தான் ''என்று முடித்தான்
''என்னாது கலங்கார்த்தால எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வை திறக்க எழ முயல ..
அவளை அமர்த்தி விட்டு சாப்பிட்டு முடித்திருந்த செந்தில் கதவை திறக்க சென்றான் .
சற்று நேரத்தில் தமிழின் ஆழ்ந்த குரல் கேட்க ,இவள் அவசரமாக உணவை முடித்து அங்கே விரைந்தாள் .
முதல் நாள் அவனை கண்ட தோற்றத்தில் ,டீ ஷர்ட் ,ஸ்வெட் பாண்ட் என்று இருந்தான் அவன் .