அபினவ் அன்று வீடு திரும்ப தாமதமானது.
முதல் முறையாக ஸ்ரேயான்ஷ் மேற்பார்வை இல்லாமல் கம்பெனியின் நிர்வாகத்தை நடத்த போகிறான் என்பதனால் அடுத்து சில தினங்கள் செய்ய வேண்டியவற்றை பொறுமையாக திட்டமிட்டு விட்டு வந்திருந்தான்...
அவன் வீட்டினுள் நுழைந்த போது, வசந்தியும் தீபாவும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவனை கவனித்த வசந்தி,
“என்னப்பா, இவ்வளவு லேட்... சாப்பிட்டுட்டு உனக்கு போன் செய்யலாம்னு இருந்தேன்....” என்றாள்.
அபினவ் தீபாவை பார்த்தான். அவள் அவன் பக்கமும் பார்க்காமல் சாப்பிடும் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்கு திருமணம் ஆன பிறகு, அவர்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடுவது என்பது இருவருக்கும் நடுவே பொதுவா
...
This story is now available on Chillzee KiMo.
...
்சுன்னு விட்டுடனும்னு சொல்றீங்களா???”
“இல்லம்மா... நான் அப்படி நினைக்குறவளா இருந்தா, நீங்க இரண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சியை பார்க்காம வேற, வேற ரூமுல இருக்கும் போதே சொல்லி இருக்க மாட்டேனா???”
“அப்போ???”
“நீ தான் முடிவு எடுக்கனும் தீபா... ஆனால்...“
“என்ன அத்தை???”