“என்ன வேல்ஷ், ரொம்ப கலக்கலா இருக்க. என்ன நான் உன்னை விட்டு போகறது அவ்வளவு சந்தோஷமா இருக்கா ? அதுவும் சரிதான். இனிமேல் என் தொல்லை உனக்கு இருக்காது இல்ல.”
“ஆனால் நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் வேல்ஷ். பேசாம நீயும் என்கூடவே வந்திடு.”
எனக்கு இன்னும் நான் எடுத்த முடிவு சரியா தப்பானே தெரியல. எனக்கு தெரியாது. உன்கிட்டயும் கேட்டுட்டுதான் முடிவு பண்ணினேன். அதனால எனக்கு எது வந்தாலும் நீதான் பொறுப்பு.
என்கூடவே இருந்து எதையும் தாங்கும் சக்தியை எனக்கு கொடு வேலா “ என்று மனம் உருகி வேண்டிய நேரம் ,
“அந்த வேலன் எப்பவும் உன் கூடவே இருந்து, உனக்கு வேண்டிய சக்தியை கொடுப்பான் பாரதி மா” என்று அவளின் தலையில் கை வைத்து ஆசிர் வதித்தார் அந்த கோயிலின் பூசாரி.
“வாங்க தாத்தா. நான் அந்த வேலனிடம் க
...
This story is now available on Chillzee KiMo.
...
்களுக்கு எவ்ளோ பாசம் மாம்ஷ். வந்த உடனே தேடறீங்க. புல்லறிக்குது போங்க”.
“வேற என்ன செய்ய. நீ எப்ப வருவனு தெரிஞ்சா அதுக்குள்ள நல்லா மூச்சு விட்டுக்கலாம் னு தான். காதும் கொஞ்சம் ரெஷ்ட் எடுத்துக்கும். நீ வந்துட்ட அதெல்லாம் முடியாதே “ என்று கலாய்த்தார் அந்த வீட்டின் புது மாப்பிள்ளை ஈஷ்வர்.