(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா

Iru thuruvangal

காரில் பயணித்துக் கொண்டிருந்த, இருவரின் எண்ணங்களும் தங்களின் முதல் பயணமான நாளை அடைந்தது. அனந்திதாவைப் பற்றிய எண்ணங்களில் முழ்கிக் கொண்டிருந்தவன் எப்படி ஆழ்ந்த உறக்கத்தை அடைந்தான் என அவனே அறியவில்லை.

ஒரு அழகிய வளைக்கரம் தன்னை எழுப்புவதாக நினைத்து அந்த கையை தன்மேல் இழுத்து வைத்துக்கொண்டு தூங்கினான். உண்மையில், அனந்திதா அவனை எழுப்பிக் கொன்டிருந்தாள்.

அவன் இழுத்த இழுப்பில், அவனை எழுப்ப சீட்டின் கைப்பிடியை எடுத்துவிட்டிருந்தவள், அவன் மேலேயே விழுந்தாள்.

அவனை அவ்வளவு அருகில் பார்க்கவும், படபடப்பாக இருந்த அவள் அவனை கூர்ந்து கவனிக்கலானால், அழகிய வெண்நிறம் கொண்ட முகம், குறும்பு எப்பொழுதும் கூத்தாடியவாறு இருக்கும் அவன் பாவம், உடல் அழகோ அவன் கட்டுகோப்பான உணவு முறைகளை கையாள்கிறான் என்பதைப் பறைசாற்றியது.

அவனிடம் சிறிது சிறிதாக தன்னைத் தொலைத்துக் கொண்டு இருந்தாள் அவள் அறியாமல். அவனிடம் இருந்து பார்வை அகற்ற அவள் திணறித்தான் போனாள்.

யாரோ தன் அருகில் தும்பும் சத்தத்தில் விழித்தவள் தான் இருந்த நிலையை எண்ணி வெட்கினாள். மேலும் அவனுடன் இருந்த தன் நிலையை அவன் அறிந்தால், அவன் தன்னைப்பற்றி என்ன எண்ணுவான் என்று பயந்தவள், அவனைவிட்டு விலக முயன்றாள்.

முடிந்தால் தானே, அவனோ அவளுடனான வருங்கால இனிய நினைவுகளை நினைத்துக் கனவுக் கொண்டிருந்தான். அதுக் கலைந்து விடக்கூடாது என்பதில், அவள் கரத்தை மேலும் வேகமாக இழுக்க அவன் மடி மேலேயே விழுந்தாள்.

விழுந்த வேகத்தைவிட, அப்பொழுது அங்கு நடந்த நிகழ்வை கண்டு இருவரும் அதிர்ச்சியில் இருந்தனர். இவர்களைப் போலவே மற்ற இருவரும் அதிர்ந்து போயிருந்தனர். அதில் ஒரு கண்கள் குறும்பையும் மற்றோன்று வெறுப்பையும் பொறாமையையும் காட்டியது.

{“அப்படி என்னதா நடந்துச்சு என்று நீங்கள் கேட்பது புரிகிறது?”}

அனந்திதாவை இழுத்தவுடன் தன்மேல் இருந்த கணத்தை உணர்ந்தவன். அதே வேகத்தில் தன் முகத்தைத் திருப்ப, அவன் உதடுகள் அவள் இதழிற்கு மிக அருகில்பட அதை உணர்ந்து, தன்னுடைய உணர்சிகளைக் கட்டுபடுத்த முடியாமல் அவள் இதழில் மெல்லிய முத்தம் ஒன்றை வைத்தான்.

பின் அவளை நிமிர்ந்துப் பார்க்க அவளின் அதிர்ந்த தோற்றம் அவன் பார்வையில் விழ, என்ன நினைத்தானோ? அவளை அணைத்து, “சாரி அனந்திதா! தெரியாம நடந்துடுச்சு. ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்றான்.

அந்த அணைப்பு அவள் அதிர்ச்சியை சிறிது விலக்கியப்பின்னும், ஏதோ ஒன்று அவளை நார்மலாக மாற்ற முயன்றும் முடியாமல் போனது. பின் அவளைவிட்டு விலகியவன். அவளை அவள் இருக்கையில் அமர வைத்துவிட்டு யோசிக்க தொடங்கினான்.

“இது எப்படி நடந்தது?” என்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவளும் அப்படியே “நாம அவன எழுப்பதானப் போனோம், அப்பறம் எப்படி இது நடந்தது?” என்று.

அவள் யோசித்ததன் விளைவில் முடிவுக்கு வந்தவள், “நான் அவன எழுப்பினேன், அப்பறம் அவன் தூக்கத்துல என்னை பிடிச்சி இழுக்கவும் அவன் மேல் விழுந்தவுடன், அவன் முகத்தைத் திருப்பவும் அவன் உதடு தன் உதட்டின்மேல் பட்டத்தின் காரணமாக, எனக்கு அவன் முத்தமிட்டது போல தோன்றியிருக்குது.” என்று எண்ணினாள்.

இருந்தாலும், “அவனிடம் எப்படி பேசுவது?” என்றுத் தயங்கினாள்.

அவனுக்கு அனைத்தும் விளங்கிவிட்டது, “என்னை எழுப்ப வந்தவளை, பிடிச்சு இழுத்தது மட்டும் இல்லாம, அவ மேல விழுந்திருக்கா. நான் மேல வெயிட்டா பீல் பண்ணவும் எழுந்துட்டேன். என்ன ஆச்சுனு பார்க்க முகத்தைத் திருப்பியிருக்கேன். அவளப் பார்த்ததும், அதுவும் அவ உதட்டுக்கு அருகில் நான் இருக்கவும் என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம அவள கிஸ் பண்ணிட்டேன்.” என்று புரிந்துவிட்டது.

இப்பொழுது எப்படி அவளை நார்மலாக பேச வைப்பது ஒருவேளை நான் வேணும்னு கிஸ் பண்ணது தெரிஞ்சுகிட்டாளோ என்று நினைத்தவன். பின் ஏதோ ஒன்று பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் பக்கம் திரும்பினான்.

அதைப் போலவே உணர்ந்த அவளும் திரும்பினாள் அவன் பக்கம். பின் அவனே, “சாரி !! அனந்திதா தூக்கத்துல நடந்துடுச்சு. நான் வேணும்னு பண்ணல.”

“நானும் உன்னை எழுப்பியிருக்க கூடாது, அல்மோஸ்ட் 5 ஹௌர்ஸ் ஆயிடுச்சு நாம டெல்லியில் இருந்துக் கிளம்பி. சாப்பிட எழுப்பினாங்க என்னைய, சோ அதுக்குதான் நான் உன்னை எழுப்ப ட்ரை பண்ணினேன். இப்போ நடந்தது ஜஸ்ட் அக்சிடேன்ட்னு நினைச்சிக்கோ ஹரிஷ்.” என்றவள் அமைதியாக இருக்க முயன்றாள்.

“அப்பாடா” என்று பெருமுச்சு ஒன்றை விடுத்தான். “நல்ல வேளை அவ அது எதிர்பார்க்காத இன்சிடென்ட் என்று நம்பிட்டா, இல்லைனா என்கிட்டே பேச கூடமாட்ட. லண்டன் போறதுக்குள்ளயே என்னோட லவ் ஸ்டோரிக்கு தி எண்டு ஆயிருக்கும். பெருமாளே காப்பத்திட்டபா” என்று மனதில் மகிழ்ந்தான் அந்த காதலன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.