இன்னும் அடுத்த மாதத்தில் பொங்கல் வருகிறது. அதுவும் தலை பொங்கல். பொங்கல் சீர் செய்யனும். அடுத்து தலை ஆடி , தலை தீபாவளி, அப்புறம் பிள்ளை பேறு என்று அடுத்தடுத்து அக்கா க்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கே...
மாமா வேண்டாமென்று பெருந்தன்மையா சொன்னாலும் புகுந்த வீட்டில் அக்கா தலை நிமிர்ந்து இருக்கனும்னா இந்த முறை எல்லாம் செய்தாகனும்.
அடுத்து எல்லாரையும் வம்பிழுத்து கொண்டிருக்கும் அருமை தம்பி பாரத். இந்த வருடம் +2 எழுத போறான். அதற்கப்புறம் நல்ல கல்லூரியில் சேர்க்கனும். அதற்கு பணம் வேண்டுமெ
அவளின் செல்ல தங்கை இந்திராவும் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள். அவளது மேற்படிப்பு மற்றும் ஆளானால் சடங்கு செய்யனும்.
அதைவிட அப்பாவின் மருந்து செலவு என்று அத்தனை தேவைகளும் கண் முன்னே வந்தது.
வெரும் வயி
...
This story is now available on Chillzee KiMo.
...
தடவியது ..
பாரதி அதை ரசித்துக் கொண்டே,
“மணி... , இந்திராவும் பாரத்தும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க.. நீ அவங்க கூட சமத்தா இருக்கனும்.. நான் போய்ட்டு ஒரே வருஷத்தில வந்திருவேன் . நீதான் எல்லாரையும் பார்த்துக்கனும்” என்று மீண்டும் ஒரு தடவை அதை தடவி எழுந்து ஒரு எட்டு வைத்தாள்..