“வாவ், அத்தை... இதெல்லாம் எவ்வளவு மிஸ் செய்திருப்பீங்கல... இனிமேலாவது நம்ம வீட்டுல இந்த சந்தோஷம் எல்லாம் அப்படியே தொடரட்டும்...”
“உங்களை போல நல்ல மருமகன் கிடைச்சா சந்தோஷத்துக்கு குறைச்சல் என்ன? மித்ரனும் நீங்களும் எனக்கு ஒன்னு தான்...”
“தெரியும் அத்தை... நான் உங்களை அத்தைன்னு கூப்பிட்டாலும், நீங்க எனக்கு அம்மா தான்....”
“அடடா... இவங்க சென்டிமென்ட் பேச்சை கன்டினியூ செய்ய விடக் கூடாது... நீ சொல்லுண்ணா சரண்யா கிட்ட பேசிட்டியா?? அவ என்ன சொன்னா???”
மைத்ரேயியின் கேள்விக்கு இல்லை என தலை அசைத்த மித்ரன்,
“இன்னும் அவக் கிட்ட பேசலை மைத்தி... இன்னைக்கு அம்மா கல்யாண பேச்சு எடுக்கவே, மனசில இருந்ததை அம்மா கிட்ட சொல்லிட்டேன்...” என்றான்.
“அப்போ இன்னும் முக்கியமான டெஸ்டை நீ முடிக்கலைன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை ஏழு மணி போல தான் எழுப்பி விடுவேன்... சொல்லுங்க மேடம்... எதுவோ சொல்லனும்னு சொன்னீங்களே...”
“ம்ம்ம்... ஏன் சரண்யா, என் அண்ணா இப்போ எல்லாம் மாறிட்டான்ல?”
மித்ரனை பற்றி மைத்ரேயி பேசுவாள் என்று எதிர்பார்த்திராத சரண்யா கோலம் போடுவதை நிறுத்தி விட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தாள்...