அவ்வளவுதான். வேறு வினையே வேண்டாம். மகேந்திரன் பயந்துவிட்டான்.
“அதெல்லாம் வேண்டாம். அம்மாவும் அப்பாவும் தூங்கறாங்கதானே? அதனால்தான் அமைதியா வரச்சொன்னேன்.”
“நாங்களும் தூங்கிட்டா உனக்கும் தூக்கம் வரும். அப்புறம் நீ வண்டியை எங்காவது விட்டுட்டா. நான் என்ன செய்யறது? இன்னும் எத்தனை வருடம் நான் வாழ வேண்டியிருக்கு? உன்னோட கவனமின்மையால் நான் அவதிப்படனுமா?”
அவன் பேசப்பேச மகேந்திரன் தலையில் அடித்துக்கொண்டான்.
“உச். நீ ஏன் இப்படி பேசறே யுகா. மாமாவும் அத்தையும் தூங்கறாங்கன்னுதானே உன் அண்ணா அப்படி சொன்னார்.”
கிசுகிசுப்பான குரலில் கிருஷ்ணவேணி கூறினாள்.
அதன் பிறகு இருவரும் சத்தம் வராமலே பேசிக்கொண்டு வர அதுவே மகேந்திரனுக்கு இடைஞ்சலாக இருந்தது.
“உங்க அண்ணா பாவம் யுகா. அவரே நீண்ட ந
...
This story is now available on Chillzee KiMo.
...
் என்று ஓரத்தில் காலை நீட்டிவிட்டு இருக்கையின் பின்பக்கம் தலைசாய்த்துக் கொண்டாள்.
பின்பு நல்ல உறக்கம் அவளைத் தழுவியது. தன்னையறியாமல் மகேந்திரன் பக்கம் சாய்ந்தாள்.
தன் மீது சாய்ந்தவளின் முகத்தைக் கடந்துபோன விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான்.
அவள் குழந்தையாய் தெரிந்தாள்.