ஒரு தகப்பனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாக குத்தினாலும், அந்த வலியை பொறுத்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டான்.
ரேஷ்மி மெல்ல மெல்ல தன் சித்தியுடன் ஒட்டிக் கொள்ள, இவன் அவளின் எதிர்காலத்தை பற்றி யோசித்து திட்டமிட தொடங்கினான்.
அவளின் படிப்பிற்கு, திருமணத்திற்கு, எதிர்காலத்திற்கு என தனி தனியே சேமித்து வைக்க தொடங்கினான்.
மகள் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையையும் சந்தித்து விடக் கூடாது என்பதற்காக அயராமல் உழைத்தான்... சேமித்தான்...!
ஒவ்வொரு நாளும் அவனுக்கு துணையாக இருந்தது சுமி தான்...
மறக்காமல் ஒவ்வொரு நாள் நடப்பதையும் அவளிடம் ஒப்பித்தான்... அதையே டைரியில் எழுதவும் தொடங்கினான்...
முதலில் அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதியவன், பின் அதையே சுமி – கமலின் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரே ஒரு தரம் யோசித்திருந்திருந்தால் கூட அப்பாவை கொஞ்சமாவது சந்தோஷமாக பார்த்திருந்திருக்கலாமோ..! பாவம் அவர்....
தூக்கத்தில் இருந்து விழித்த ஷ்யாம், எழுந்து அமர்ந்திருந்த ரேஷ்மியை கவனித்து விட்டு, துள்ளி குதித்து எழுந்தான்.
அவளின் கண்களில் இருந்த கண்ணீர் கண்ணில் படவும்,