“சில்க், அழாதேடா..” என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.
அதுவரை மெலிதாக இருந்த ரேஷ்மியின் அழுகை மடை திறந்த வெள்ளமாக இப்போது அதிகமானது!
கமலின் மறைவை நினைத்து அழுகிறாள் என நினைத்து அவளின் முதுகை கனிவுடன் வருடிய படி அவளை தேற்ற முயன்றான் ஷ்யாம்.
நிறுத்தாமல் தொடர்ந்து சில நிமிடங்கள் அழுதவளின் அழுகை மெல்ல, மெல்ல குறைந்தது.
“ரேஷ்மி... ரேஷூ...” என்ற பூங்கோதையின் குரல் அறைக்கு வெளியே கேட்கவும், வேகமாக சென்று கதவை திறந்த ஷ்யாம்,
“அவ இன்னும் அழுதுட்டே இருக்கா பாட்டி...” என்றான் வருத்தத்துடன்.
பூங்கோதையும் இரவெல்லாம் அழத் தான் செய்திருந்தாள். கமல் அவளுடைய மூத்த மகன்... அவள் இங்கே கல்லை போல இருக்க, மகனின் வாழ்க்கை முடிந்து போன துக்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஆனாலு
...
This story is now available on Chillzee KiMo.
...
லகம் என்று வாழ்ந்து...
“என்ன ரேஷூ அமைதியா வர?” ஹேமாவின் கேள்வி அவளை அவளின் யோசனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது.
“அம்மா, அப்பாவை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன் ஆன்ட்டி... இரண்டு பேரும் கொஞ்சம் வருஷம் தான் ஒன்னா வாழ்ந்தாங்க ஆனாலும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க...”