(Reading time: 15 - 29 minutes)

முடிகளை ஒதுக்கியவாறு அவளின் கன்னம் பற்றி அவன் அழுத்த அதற்குமேல் முடியாதவளாய் லேசாய் விழி உயர்த்தியவள் அவன் பார்வையை தாங்காது மார்பில் புதைந்து கொண்டாள்.

“வாவ் நீ அங்கிரி பர்ட்டா இருந்தாலே என்னால சமாளிக்க முடியாது இப்போ என்னடானா இப்படி ப்ளஷ் பண்றியே திஷா பேபி..”,என அவளை காதுமடலை இதழ் உரசக் கூற அவளோ மொத்தமாய் உருகி விட்டிருந்தாள்.

அவன் சட்டையை இறுகப் பற்ற அவனோ தன்னிடமிருந்து பிரித்தவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டான்.

“திஷாம்மா என்ன பாரு..”,அத்தனை மென்மை அவன் குரலில் மறுப்பின்றி அவள் அவன் விழி நோக்க,

“லவ் யூ டீ மை கருப்பழகி..இந்த குண்டு குண்டு கண்வழியா என் உலகத்தை நிறைய நிறைய ரசிக்கனும்..கோவம் வர்றப்போ எல்லாம் இந்த மூக்கை  கிள்ளி கடிச்சு சண்டை போடணும்..என் மொத்த காதலையும் இப்போ இந்த நொடி உன்னோட இந்த உதட்டுல முத்தமாய் கொடுக்கனும்..வழக்கம் போல முறைக்க மாட்ட தான?”,என கேலியாய் முடித்தாலும் அவன் பார்வை அவனின் தீவிரத்தை உணர்த்தியது திஷானிக்கு.

எதிர்பார்ப்பு பரபரப்பு பதட்டம் பயம் என அத்தனையும் அவளின் அந்த விழியில் தாண்டவமாட தலை அதுவாய் இல்லையென்பதாய் அவனுக்கான அனுமதியை வழங்கியது.

தன்னவளின் காதல் கவிஞனாய் தன் முதல் கவிதையை அவள் இழ்களில் எழுத தொடங்க பெண்ணவளின் கைகளோ அவன் சட்டையை இன்னுமின்னுமாய் இறுக்கியது..நொடிகள் நிமிடங்களாக தன் தெம்பனைத்தையும் இழந்தவளாய் தன்னவனிடமிருந்து விலக நினைக்க லேசாய் தன்னவளிடமிருந்து விலகி நின்றான் அபினவ்.

“சாரி டியர் ஆர் யு ஓ.கே?”,என்றவாறே அவளின் முடியை சரி செய்ய கூச்சத்தில் நெளிந்தவள் அவனை கடந்து செல்ல எத்தனிக்க அதற்கு மேல் சீண்டாமல் அவள் செல்ல அனுமதித்தான்.

முத்தமென்பது சிறிய விஷயமென நினைத்திருந்தவளுக்கு அதன் முழுமையான அர்த்தத்தை தன் ஒற்றை இதழொற்றலில் காட்டியிருந்தான் அந்த அன்புக் கணவன்.உடைமாற்றி இருவருமாய் படுக்கத் தயாராக வழக்கம் போல் திஷானி ஒரு ஓரமாய் ஒண்டிக் கொண்டு தன்னவனுக்கு முதுகு காட்டி படுத்திருக்க அவன் சட்டென அவளை திருப்பி தன்புறம் இழுத்து கையணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“திஷா நா சமத்து பையன் தான் ஆனா இனியும் அப்படியே முடியாது..எதுக்கு பெட்ல இருந்து கீழே விழுந்து ஓட போற மாதிரியே படுத்துக்குற..இனி எப்பவும் என் கைக்குள்ளயே உன் வாசம் என்னை உரச அப்படியே தூங்கு…உன் வாசத்தை நம்ம ரூம்ல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் என் மேல நா பீல் பண்ணிட்டேயிருக்கணும்..”,என இன்னுமாய் தன்னோடு சேர்த்து அவள் உச்சி முகர்ந்து விடுவித்தான்.

“டீச்சரம்மா எப்போ பாத்தாலும் நா தான் பக்கம் பக்கமா டயலாக் பேசுறேன் நீ என்னடானா என்ன வெறிச்சு பாத்துட்டே இருக்க..என்னாச்சு இல்ல என்ன நினைக்குற சொன்னா தான தெரியும் எனக்கு..இதெல்லாம் பிடிக்கலனா பிடிக்கலனாவது சொல்லு..”,என அவள் முகத்தை உயர்த்த அப்போது தான் அவள் கண்களின் கண்ணீரை கவனித்தான்.

“ஹே என்னாச்சு “,என பதறிவனாய் அவளை விலக்க எத்தனிக்க அவள் இன்னுமாய் அவனோடு ஒண்டினாள்.

“ஏன் நீங்க இப்படியிருக்கீங்க..இப்படிகூட காதலிக்க முடியுமா என்ன!!சொல்லப் போனா லவ் யூங்கிற வார்த்தைக்கான மேஜிக் நீங்க இப்போ சொன்னப்போ நான் உணர்ந்தேன்..மேபி சாதாரணமா ஒரு கல்யாண வாழ்க்கை இப்படி தான் இருக்குமோ என்னவோ..

ஆனா நிச்சயமா எல்லா புருஷனும் உங்களை மாதிரியே அவங்க மனைவிகிட்ட நடந்துக்க மாட்டாங்கனு தான் தோணுது..நிச்சயமா இந்த பத்து பன்னிரண்டு நாளா தான் நா நானாவே இருக்குறேன்னு தோணுது…தேங்க் யூ ஃபார் எவ்ரிதிங் என தன்னவனை இறுக்கிக் கொள்ள ஒன்றும் கூறாமல் அவளின் தலைகோதிக் கொடுத்தான் அபினவ்..

சில நொடிகளில் அவளாகவே விலகி அவனை ஏறிட,”அழுகாச்சியெல்லாம் முடிஞ்சசுதா?திஷானி அழுதா நல்லாவே இல்ல..அதுவும் அபினவோட திஷானி அழவே கூடாது சரிதானா?”

“ம்ம்”,என்றவள் அழகாய் சிரிக்க தன் மார்பில் சாய்த்தவன் தந்தையும் தாயுமாகிப் போனான் தன் அன்பானவளுக்கு..

கண் விழித்தவளுக்கு அந்த  நாளின் விடியல் ஏனோ அழகின் மொத்த வடிவாய் தெரிந்தது.காரணம் தன்னை சிறு பிள்ளையை அரவணப்பதைப் போல் அரவணைத்து தூங்கும் தன்னவனின் தெளிந்த முகமே..

தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்திருந்தவள் நகரக் கூட தோன்றாமல் அப்படியே படுத்திருந்தாள்.அந்நியமில்லாத அவன் தொடுகை கட்டுப்பாடின்றி அவளை மொய்த்து எடுக்கும் அவன் பார்வை அனைத்திற்கும் மேலாக அவனிடம் உணரும் பாதுகாப்பு இதைவிட இந்த பிறவியில் தனக்கு எதுவும் தேவையே இல்லை என்றே தோன்றியது அவளுக்கு..

அவளின் சிந்தனையை கலைப்பதாய் அவனின் அசைவு நிகழ்விற்கு கொண்டுவர மெதுவாய் அவன் கை நகர்த்தி எழுந்து கொண்டாள்.சற்று தாமதாகவே எழுந்தவன் தயாராகி தங்களுக்கான உணவை வரவழைத்து இருவருமாய் உண்டு முடிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.