அவரை முறைத்தவரேயே ரிஷி கீதாவை தேடிவீட்டிற்குள் சென்றான் . கீதாவோ, ஜன்னல் வழியே தோட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.
ஏன்? தன்னிடம் சதாசிவம் இப்படி நடந்து கொண்டார்? ஒரு வேலை தன்னை பற்றி ஏதேனும் அவர் தெரிந்து கொண்டாரயோ??? என்று நினைக்கும் போதேயே அவளது நெஞ்சு வலிப்பது போல உணர்ந்தாள் .
அவளது, நெஞ்சை அழுத்தியவரேயே ஜன்னல் கம்பியினை பிடித்து கொண்டு நின்றாள்.
தீடிர் என்று, யாரோ தன்னை இழுப்பது போல கீதா உணரும் முன்... கீதாவை ரிஷியை இறுக்கமாக கட்டி அணைத்து இருந்தான் .
உண்மையில், அவனது அணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது. ஆனால், இது சரி இல்லை என்பதை உணர்ந்தவள் ரிஷியை விட்டு விலக எண்ணினாள்.
ரிஷியோ, கீதாவை விடவில்லை . மெதுவாக, அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.
கீதா, நம்மை சுற்றி நிறைய பிரச்சனை இருக்கு. சீக்கிரம் அது எல்லாம் நான் சரி பண்ணிடுறேன். இதுக்கு மேல உன்னை விட்டு நான் பிரிஞ்சு இருக்க முடியாது. அதுவரைக்கும் pls நீ கஷ்டப்படாதடா.... அப்பா உன்கிட்ட நடந்து கிட்ட விதத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் டா.... என்று கெஞ்சுவது போல பேசுபவனை பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால், அவளது கண்ணீர் அவளை காட்டி கொடுத்து விட்டது. ரிஷியை விட்டு விலகிவள்... ரிஷி எந்த ஒரு பிரச்சனையும் நீங்க தீர்க்க வேண்டாம்.
உங்க அப்பா மேலே எனக்கு எப்பவும் கோபம் வந்தது இல்லை. என் தலையில என்ன எழுதி இருக்கோ அது தான் நடக்கும். இதுல, யாரையும் நான் குறை சொல்ல விரும்பல.... நான் குழந்தையை பார்க்க போறேன்... என்று கூறியவள் அறையை விட்டு வெளியேறினாள்.
கீதாவின், மனது எவ்வளவு வலித்து இருந்தால் அவள் இப்படி பேசுவாள். இதற்கு காரணம் அப்பத்தானேயே ... அவரிடமேயே கேட்டு விடலாம் என்று அவரது அறைக்கு சென்றான்.
அண்ணா... நீங்க சொல்றது உண்மையா??? கீதாவை பார்த்து நீங்க என் பயப்படணும்???... என்று ஆச்சரியத்துடன் பருவதம் அம்மாள் தனது அண்ணனிடம் கேட்டார்.
அதற்கு பதில் தெரியாம தான் நான் உள்ள வந்துட்டேன்மா... மத்தபடி அந்த பெண்ணாய் அவமதிக்கணுகுற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லமா.... என்று கூறி கொண்டு இருந்தார்.
அண்ணா... ஒரு வேலை கீதா நல்ல பொண்ணு இல்லனு உங்களுக்கு தோணுதா????
கண்டிப்பா இல்லாம..... அவ ஒரு போதும் தப்பான பெண்ணாய் இருக்க முடியாது ..... உறுதியுடன் பருவதம் அம்மாளிடம் கூறுவதை ரிஷியும் கேட்டு கொண்டு இருந்தான் .
குழந்தையை காண சென்ற கீதாவை சிவகாமி அம்மாள் வழிமறித்தார்.
கீதாவோ , என்ன என்பது போல பார்க்க??? சிவகாமி அவளது கையில் இருந்த போட்டோவை அவளிடம் காட்டினாள்.
கீதாவோ, அதிர்ச்சியின் எல்லைகேயே சென்று விட்டாள்.
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}