ஆனால் வெறும் தொண்டாக மற்றவர்கள் செய்ய முன்வராத போது இதையும் ஒரு வேலையாக நாம் ஏன் செய்யக்கூடாது என்று நண்பனோடு அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய முன்வந்தான். தன் இரண்டாவது குடும்பத்திற்கும் தொழிலுக்கும் ஏதும் பிரச்சனை வராமல் இருக்கவே, தந்தையும் கண்டுகொள்ளவில்லை.
மிகவும் சவாலான பிஸினஸ் ஒன்று நல்ல லாபத்துடன் முடிய ரிலாக்ஸாக ஒரு பிக்னிக்காய் நினைத்து தான் இந்த குழுவைத் தொடங்கினான் பரத். மனம் ரிலாஸ்காக சுற்றவும் செய்யலாம், நாட்டிற்கும் ஏதாவது உபயோகமாக இருக்குமே அதிலும் பெங்களூரில் செயற்கை மணற்திட்டுக்கள் விஷயமும் வெற்றி பெற்று விடவே அவனுக்கும் டபுள் சந்தோஷம். இந்த குழுவின் வெற்றியைப் பொறுத்து அடுத்த இடத்திற்கு செல்லும் பிளான், செயல்பாடுகள் செய்து வருவதாக நண்பன் சென்றுவிடவும் இந்த குழுவிற்கு பரத் பொறுப்பேற்றுக்கொண்டான்.
இன்னும் முழுதாய் இரண்டு நாட்களுக்குள் அந்தமான் தீவுகளை நெருங்கிய பின்னர் நடைபெறப்போகும் வேலைகளை எண்ணியபடி யோசித்துக்கொண்டு இருக்கும் போதுதான் நேற்றைப் போல இன்றும் அந்த ஹோட்டலில் சந்தித்த பெண் நின்றிருந்ததைப் பார்த்தான்.
ஏனோ அவளைச் சீண்டவேண்டும் போல தோன்றியது ஆனால் நேரில் அவளின் அமைதி ததும்பும் முகம் குழப்பம் இல்லாத தெளிவான பார்வையும் எல்லாரையும் விட அவளை ஸ்பெஷலாகக் காட்டியது. உடல் ரீதியாக அவளை தான் அணுக வில்லை என்ற எண்ணம் அவனுக்கே நிச்சயம் ஏற்பட்டபின்னரே பரத் உத்ராவைப் பார்த்துப் பேசத் துவங்கினான்.
பார்க்கும் பெண்களை எல்லாம் தவறாக எண்ணும் பழக்கம் இல்லையென்றாலும், தன் தனிமையை மறக்க மதுவையும் மாதுவையும் அவன் துணைக் கொண்டிருந்தான். கண்ணியம் தவறி குடும்ப மகளிரைத் தொட்டது இல்லை. உத்ரா அவனை மனதைப் பிசைந்து கொண்டு இருந்தாள் காரணம் அறியாமல் போனாலும் அந்த நிலை அவனுக்குப் பிடித்துப்போய் இருந்தது.
தனக்கு முன்னால் பின்னப்பட்டிருக்கும் மிகப்பெரிய வலைப் பற்றி அறியாமல் தானும் வீழ்ந்து மற்றவர்களின் உயிரையும் தான் பணயம் வைக்கப் போகிறோம் என்று பரத்திற்கு அப்போதைக்கு தெரியவில்லை...........
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}