(Reading time: 10 - 19 minutes)

அதனைத் தன் சொற்களால் வெளிப்படுத்தியே விட்டாள் மயா..

மயா அவரை லூஸு என்று சொல்லாமல் சொன்னதைக் கேட்டு அதுவரை மறைத்திருந்த சுயோதனும் சுஷாஷனும் அவளை அடிக்க வந்தனர்..

“மாப்பிளைகளா.. சின்னப்பிள்ளை அது.. விடுங்க..”, என்றார் சாவகாசமாக..

“மாமா.. உங்களை அது ஏதோ சொல்லுது.. நாங்க அதைப் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா..??”, என்றான் சுஷாஷன்..

“இப்போ இதுங்க இருக்க நிலமையில பேச மட்டும் தான் முடியும்..”, என்றவர் தேவவ்ரத ஆச்சார்யாத் தன்னை ஏதோ ஒரு வித சந்தேகத்துடன் பார்ப்பது கண்டு, “என்ன மாமா ஏதோ என்னை சந்தேகமாப் பார்க்கற மாதிரி இருக்கு..??”, என்றார் கேள்வியாய்..

ஆச்சார்யா அவருக்கு பதில் சொல்லவில்லை என்றபோதிலும் ராஜாவையேப் பார்த்துக்கொண்டிருந்தார்..

“மாப்பிளை உங்க போனை உங்கத் தாத்தாவுக்குக் காட்டுங்க.. அப்போவாவது அவரது சந்தேகம் தீருதான்னு பார்க்கலாம்..”, என்றார்..

சுயோதன் உடனே தானது போனில் இருந்த ஒரு போட்டோவை அனைவருக்கும் காட்டினான்..

அதில் எழில் மயா தியா ரியா வ்ருதுஷ் ரிக்கி விக்கி என அனைவரின் பேரெண்ட்ஸும் இருந்தனர்.. சேர்களில் கட்டிப்போட்டபடியே..

“என்ன நல்லாப் பார்த்துட்டீங்க இல்லை.. இப்போ அந்த மேப்பைக் கொடுங்க..”, இது மீண்டும் ராஜா..

இப்பொழுது அவரை உறுத்துப் பார்ப்பது தியாவின் முறையானது..

அனைவரும் அவளிடம் அந்த மேப்பை ராஜாவிடம் கொடுக்கச் சொல்ல அவளும் மேலும் அழுத்தமாகவே நின்றாள்..

“தியா.. நமக்கு இந்தப் ப்ராஜெக்ட் வேண்டாம்.. பல வருஷம் கழிச்சு நம்ம பேரெண்ட்ஸ் நமக்குக்கெடச்சிருக்காங்க.. இப்பொழுது போய் நீ வீம்பு பிடிக்கலாமா..??”, இது க்ரியா..

“நான் வீம்பு பிடிக்கல க்ரியா.. இவர் சொன்னதை கவனித்தீர்களா எல்லோரும்..?? சுஜன் அண்ணா இறந்துவிட்டார் என்கிறார்.. அவர் இறந்த விஷயம் இங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது.. ஆனால் இவருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது.. அப்போ இவருக்கும் சுஜன் அண்ணா இறந்ததற்கும் இவருக்கும் சம்மந்தம் இருக்கு.. அப்படித் தானே..??”, என்றாள் ராஜாவைக் கூர்ந்து பார்த்தபடியே..

“சம்மந்தம் என்ன.. அவன் இறந்ததற்கு முழு காரணமும் நானேதான்..”, என்று தெனாவெட்டாகக் கூறியவரை இப்பொழுது பயத்துடன் பார்த்தனர் அனைவரும்..

“இப்பொழுது நீங்கள் அனைவரும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும் அந்த பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்க.. இல்லையென்றால் சுஜனின் நிலமைதான் அனைவருக்கும்..”, என்ற ராஜா, ”உங்களுக்கெல்லாம் சாம்பிள் வேண்டும் என்றால் காட்டுகிறேன்..”, என்றார் இன்னும் இன்னும் ஒருவிதத் தீவிரத்துடன்..

“இவங்க சொல்ற அந்தப் புதையலோ பொக்கிஷமோ.. அதை எல்லாவற்றையும் விட முக்கியம் உங்கள் அனைவரின் பெற்றோரும் தான்..”, என்ற தேவவ்ரத ஆச்சார்யா, “அந்த மேப்பை இவர்களிடமே கொடுத்துவிடலாம்..”, என்றார்..

ஒரு வித இயலாமையுடன் தனது ஹேன்ட் பேக்கிற்குள் கையைவிட்டவள் அது எம்ப்டியாக இருப்பது கண்டு அதிர்ந்தவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் க்ரியாவிடம், “க்ரியா உன் ஹான்ட் பாக்கைக் கொடு..”, என்றாள்..

“எதுக்கு என் பேக்..??”, என்று மனதில் நினைத்த போதும் தனது பேக்கை தியாவிடம் கொடுத்தாள் க்ரியா..

அவளது பேக்கும் எம்ப்டியாக (empty) இருப்பது கண்டவளது இதழ்கள் தானாகவே, “மேப்பைக் காணவில்லை..”, என்றது சத்தமாக..

one or two epis to go.. 

வியூகம் வகுக்கலாம்...

Episode # 28

Episode # 30

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.