30. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி
பயமே இல்லாதவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த மேப்..
ஹான்ட் பாக்கில் வைத்திருந்த மேப் எங்கே போயிருக்கும்..??
மேப் காணவில்லை என்று இவர்களிடம் சொல்லலாம்மா..?? என்று கேள்வி பிறக்க சொல்லாமல் விட்டால் தான் பிரச்சனை என்றும் புரிந்தே இருந்தது தியாவிற்கு..
அனைவரும் தன்னைப்பார்ப்பது புரிந்து மேப்பைக் காணவில்லை என்றாள் தியா மெதுவாக..
“என்ன தியா ஷ்ரனு என்னை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா அனைவரும்..??”, கோபமாக கேள்வி எழுப்பினார் ராஜா..
இல்லை என்பதாய் வேகமாய் தலையை ஆட்டியவள், “உண்மையாகவே மேப்பைக் காணோம்..”, என்றாள்..
“எங்க வெச்சிருந்தீங்க மேப்பை..??”, இது சுஷாஷன்..
“பேக்ல தான்..”, என்று சொல்லிமுடிபதற்குள் பெக்கைப் பிடுங்கியிருந்தான் சுயோதான்..
கத்தியை விட்டுக்கிழிக்காத குறையாய் அந்த பேக்கை கிழித்தெறிந்தவனுக்கு ஆத்திரம் ஆத்திரம் ஆத்திரம் மட்டுமே நிலையாய் அந்நிமிடம்..
அவன் செயலில் ஒரு அரக்கத்தன்மை தென்ப்பட அனைவருக்கும் ஒரு கிலி..
இவர்கள் தங்கள் பெற்றோர் ஏதாவது செய்துவிடுவார்களோ என்று..
“சுயோதா இவர்களுக்கு உண்மையாகவே மேப் எங்கே சென்றதென்று தெரியவில்லை..”, என்றார் ராஜா..
“எப்படி மாமா அவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றீங்க..??”, சீற்றத்துடன் வெளிவந்தது சுயோதனின் குரல்..
“பெற்றோர்கள் பயனக்கைதிகளாக இருக்கும் சமயம் இவர்கள் பொய் உரைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்..”, என்றவர், “நரீசன் எங்கே..??”, என்று கேட்டார்..
“இப்பொழுது வந்துவிடுவான் மாமா..”, என்ற சுஷாஷன், “இவர்களை என்ன செய்வது..??”, என்று கேள்வி எழுப்பினான்..
“ஒன்றும் செய்ய வேண்டாம் சுஷாஷா.. சுற்றி நம் ஆட்கள் இருக்கிறார்கள்.. இங்கிருந்து இவர்கள் தப்பிப் பிழைப்பது கடினமே..”, இது ராஜா..
ராஜா சொன்ன பிறகே சுற்று ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்த்தனர் அனைவரும்..
மரங்கள் செடிகொடிகள் தவிர வேறு எதுவும் தென்படவில்லை இளசுகளுக்கு...
“என்ன ஆட்கள் யாரும் தட்டுப்படவில்லையா உங்களுக்கு..??”, என்று கேட்ட சுபலராஜா, “டேய் வாங்கடா..”, என்றார் சத்தமாக..
தப்பிச்செல்ல வழியில்லாதாக்க நிமிடத்திற்குள் ஒரு பத்துப் பதினைத்து பேர் சுற்றிவிட்டனர் அவர்களை..
“இனி உங்களால் தப்பிக்கவே முடியாது..”, என்று பலமாக சிரித்தவர் சுஷாஷனிடம் திரும்பி, “நரீசன் வரும்வரை சற்றுத் தள்ளி காத்திருப்போம்.. நாற்றம் தாங்கமுடியவில்லை..”, அனைவரும் அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு சற்றுத் தள்ளியிருந்த ஒரு மரத்தடி கல்லில் அமர்ந்துகொண்டார்..
“அதான் மேப் எங்ககிட்ட இல்லை என்று தெரிந்துவிட்டதே.. எங்களை விட்டுவிடவேண்டியது தானே..”, என்றார் தேவவ்ரத ஆச்சார்யா..
“உங்களை விட்டுவிடத் தயார்தான் நாங்கள்.. ஆனால் அதில் ஒரு சிக்கில்..”, இழுவையாய் ஆரம்பித்த ராஜாவை என்னவென்பது போல் பார்த்தார் ஆச்சார்யா..
“எழிலோட ஊருக்கு லட்சுமி கூட கிருஷ்ணன் துணைக்கு போயிருக்கான்.. அதனால் புதையல் எடுக்க நீங்க தான் மாமா எனக்கு உதவி செய்யனும்..”, பணிவாக மொழிவது போல் சொன்ன ராஜா, “நீங்க உட்காருங்க மாமா.. கால் வலிக்கப்போகுது..”, அக்கறைபோல்..
அவரின் பேசுக்கள் அனைவருக்கும் கடுப்பை ஏற்படுத்த ஒரு வித இயலாமையில் அமர்ந்திருந்தனர் அனைவரும்..
“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா..??”, இது தியா..
“கேளுங்க தியா.. உங்களுக்குக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது..”, என்ற ராஜாவை அற்பபுழுவைப் போல் பார்த்துவைத்தனர் அனைவரும்..
அதையெல்லாம் கண்டுகொண்டால் அவர் சுபலராஜா இல்லையே..
ஒருவித தந்திரப்பார்வாயுடனேயே அமர்ந்திருந்தார் என்னவென்பது போல் தியாவைக் கூர்ந்து பார்த்தபடி..
“சுஜன் அண்ணா உங்கத் திட்டத்தை எல்லாம் கண்டுபிடிதுவிட்டதால் அவரைக் கொன்றீர்களா..??”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“சுஜன் அண்ணா..”, நகைச்சுவை கேட்டது போல் கலகலவென சிரித்தவர், “அவன் எங்க திட்டத்தை கண்டுபிடிக்கறதா.. நோ சான்ஸ்..”, என்றார்..
“பின்ன..??”
“அவனும் எங்கள் திட்டத்தில் ஒருவனே..”, என்று அனைவரையும் அதிரவைத்தார்..
சுஜனும் அவர்கள் திட்டத்தில் ஒருவன் என சுபலராஜா சொல்வது கேட்டு எழில் தியா மயா மூவரையும் தவிர அனைவரும் அதிர்ச்சியாகவே பார்த்திருந்தனர்..
“என்ன சொல்றீங்க..?? சுஜன் உங்கள் திட்டத்தில் ஒருவனா..??”, இது ரிக்கி..