(Reading time: 12 - 23 minutes)

“இவர்களின் பெற்றோருக்கு என்ன.. அனைவரும் சுகமே.. செழுவூரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர் இப்பொழுது..”, என்ற அகிலன், “ஆனால் இவர்களின் (சுயோதன் சுஷாஷனைக் காட்டி) பெற்றோருக்குத் தான்..”, என்று இழுத்துவைத்தான்..

“அப்பா அம்மாக்கு என்னாச்சு..??”, பதறியபடியே கேட்டனர் பிள்ளைகள் இருவரும்..

“கடத்தல் கொலை மிரட்டல் என பல குற்றங்கள் அவர்களின் மீது.. கம்பி எண்ணத்தயாராகி விட்டார்கள்..”, என்று அகிலன் சொன்னதும் சுயோதன் தந்தைக்கு போன் செய்தான்..

இரண்டு முறை முழு ரிங்கும் போய் நிற்க மூன்றாவது முறை போனை எடுத்தவரிடம் அப்பா அப்பா என்றிருந்தான் சுயோதன்..

மறுமுனையோ உங்களைத் தான் தேடி வந்துகொண்டிருக்கிறோம்.. அடுத்து நீங்கள் தான் கம்பி என்னப்போகிறீர்கள் என்றது..

மறுமுனை சொன்னதை தன் மாமனிடமும் நரீசநிடமும் சொன்னவனுக்கு ஒரே குழபப்ம் பெற்றோர்களுக்கு என்ன ஆனதென்று கூடவே பயமும் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்ககூடாதென்று..

சுயோதன் சொன்னதில் கோபமுற்று கையில் கிடைத்த கல்லை அகிலனின் மீது தூக்கியெறிந்த ராஜா, “என்ன பண்ண என் தங்கையையும் மாப்பிளையையும்..??”, என்று கேட்டார்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நான் ஒரு செய்தி மட்டுமே அனுப்பினேன்.. ஊர்க்காரர்கள் இரகசியமாக வேலையை முடித்துவிட்டார்கள்..”, என்றது அகிலன்..

ஆம் ராமகிருஷ்ணனும் சீதாலக்ஷிமும் சேர்ந்து அனைவரையும் அடைத்துவைத்திருக்கும் செய்தி கேட்டதும் எழிலைப் போல் குரலை மாற்றி ஊரில் இருப்பவர்களுக்கு தகவல் சொல்லியிருந்தான் அகிலன்..

சற்றே சிரமப்பட்டாலும் அனைவரையும் கீறல்கள் ஏதுமின்றி காப்பாற்றியிருந்தனர் அனைவரும்..

உடலை விட்டுப்போன உயிர் அப்பொழுது தான் திரும்பி வந்தது போல் இருந்தது அனைவருக்கும்..

இறுக்கம் தளர்ந்திருந்தனர் அனைவரும்..

அனைத்தும் தனக்கு பாதமாகவே போய் முடிந்ததை ஏற்றுக்கொள்ளாமல் தேனாவேட்டாகவே நின்றிருந்தான் நரீசன் அடுத்தத் தாக்குதலை அவன் தொடங்க..

One more epi to go..

வியூகம் வகுக்கலாம்...

Episode # 29

Episode # 31

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.