இந்த செயலில் இரு பெண்களுமே சற்று வியந்தாலும், பரத் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. உத்ரா ஐ நீட் கம்பானியன் இன்று என்னுடன்....என்று வார்தைகளை வீசியவன் அவளின் பார்வையில் தென்பட்ட அணலைக் கண்டதும், பேசிக்கொண்டு இருக்க முடியுமா என்றுதான் கேட்க வந்தேன் அதாவது இரவு உணவிற்கு என்னுடன் நம்பிக்கையில்லையென்றால் உங்கள் தோழியையும் அழைத்த வரலாம்
எதற்கு நீங்க இரண்டுபேரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, நான் வாய் பார்த்துக்கொண்டு இருக்கவா ? உங்கள் போதைக்கு என்னை ஊறுகாய் ஆக்க வேண்டாம் என்று சிரிப்புடனே ஊசியை ஏற்றினாள் பத்மினி.
நேற்று இரவே நீண்ட நேரம் கண்விழித்து விட்டேன் ஸார் இன்று கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது எனவே வாய்ப்பை மறுக்கும் நோக்கில் வார்த்தைகளை முடிக்காமல் பத்மினியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள் உத்ரா.
அப்போதைக்கு அந்த பேச்சு முடிந்தாலும் பத்மினியின் பேச்சு மட்டும் முடியவில்லை, உத்ரா டியர் எனக்கென்னவோ அந்த பையன் உன்னை லவ்வுறான்னு தோணுது.
எந்தப் பையன்
பரத்.....
உனக்கு நல்ல விதமாகவே யோசிக்கத் தெரியாதா ?! இரவு உடைக்கு மாறியபடியே கேட்டாள் உத்ரா.
நான்தான் உன்கையைப் பிடிச்சி இழுத்து இன்னைக்கு நைட் என்கூட இருக்க முடியுமான்னு கேட்டேன் பாரு ? உனக்கு வேண்டான்னா சொல்லு அவனை நான் பிக்கப் பண்ணிக்கிறேன்.
பரத் பெரிய மல்ட்டி மில்லியனர் அவருக்கு நிறைய பெண் நண்பர்கள் உண்டு. என்னாலே எல்லாம் அப்படி சோஷியலா பழக முடியாது இந்த ஈவன்ட்டின் நிர்வாகி என்னும் பெயரில் தான் எனக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குமே தவிர, மற்ற எந்த உறவின் அடிப்படையும் இல்லை, நீ அவரை லவ்வுவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ஆல் தி பெஸ்ட் தோழி.
ஆனா அந்த பையன் உன்னையில்ல சுற்றிசுற்றி வர்றான்.....அதிலும் அந்தக் கண்ணு உன்னை நோக்கியே அலைபாயுது. நீ ரெக்மண்ட் பண்ணேன் எனக்கு பத்மினியின் தலையிலேயே குட்டினாள் உத்ரா
லவ்வுக்கு ரெகமெண்ட்டா ?! எனக்கு வேலையிருக்கு நீ கட்டிலில் படுத்து கனவு காண் நான் அந்த வெளிப்பக்கம் கொஞ்சநேரம் நின்னுட்டு வர்றேன். லாபியிலே யாரும் இல்லை ?!
இரவு உடையின் மேல் ஒரு மெல்லிய சால்வையைப் போர்த்தியபடியே நீண்ட கூந்தலை உலர விட்டு வெளியேறினாள் உத்ரா. அவளுக்குமே தனிமை தேவைப்பட்டது. மதியம் பரத் தன்னுடனே இழைந்தது. பத்மினிக்கு மட்டுமல்ல மற்ற இருவருக்குமே சந்தேகம் ஏற்பட்டு இருக்கும். அதிலும் இங்கு பரத்தின் பழக்கவழக்கம் அறிந்திருப்பவர்கள் தன்னையும் அவனுடன் பழகும் பெண்ணைப்போல நினைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஒருவேளை அவனுமே அந்த எண்ணத்தில் தன்னுடன் பேசுகிறானா ? அல்லது உதவி செய்தவள் அவனை மறுக்கமாட்டாள் என்றா ?
பழைய முதலாளியைப் போல அவன் மூர்க்கன் இல்லையென்றாலும், இது அவனின் இடம் அவனுடைய ஆட்கள் ஒருவேளை .... மீண்டும் மீண்டும் எத்தனை முயன்றாலும் பரத்தின் நடவடிக்கையில் நல்லதைத் தவிரவும் வேறு எதையும் உணர முடியவில்லை, வார்த்தைகளில் எல்லைமீறல் இருக்கிறதே தவிர அவனின் செய்கைகள் அந்த கண்கள் எதிலும் தவறு தெரியவில்லை. எதிலும் தான் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும் என்று முடிவு செய்தாள்.
ரொம்பவும் தீவிரமான யோசனையா ? உங்கள் தனிமையை கெடுத்துவிட்டேனா ? பிரியன் பேச்சில் கலைந்தவள்.
அப்படியெல்லாம் இல்லை தூக்கம் வரவில்லை, கொஞ்சநேரம் தனித்து இருக்கலாம் என்று அவனும் அருகே நிற்க வழியைவிட்டு நின்றுகொண்டு நீங்கள் இன்னமும் உறங்கவில்லையா பிரியன் என்றாள்
எனக்கும் அதே நிலைமைதான். இந்த டீம் நல்லபடியாய் எல்லாம் முடித்து திரும்பவேண்டுமே அது வரையில் எனக்கு உறக்கம் கொஞ்சம் தூரமே சிரித்தான்
வெகு அற்புதமாக இருந்தது உங்களின் விளக்கம். நல்ல அனுபவசாலியான உங்களின் கீழ் பணிபுரியப்போகிறோம். செயற்கை மண் திட்டுக்கள் எப்போது உருவாக்கப் போகிறோம் அதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும். அதிலும், செயற்கை மண்திட்டுகளின் கடலின் அலைகளின் அடர்த்தியைத் தாங்குமா ?!
பிரியன் வெகு நிதானமாய் அவளின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருக்க, உன்னை அந்தப் பக்கத்தில் இருந்து பார்த்ததும் ஏதோ கடல் கன்னிதான் கப்பலுக்குள் புகுந்துவிட்டதோ என்று நினைத்தேன் என்று பேச்சைத் துவங்கியவன் உத்ராவின் அருகில் பிரியனைக் கண்டதும் முகம் சுருக்கினான். அதேநேரம் வெளியே வந்த பத்மினியும் இவர்கள் மூன்று பேரையும் பார்த்து என்ன உத்ரா தனியா கொஞ்சநேரம் இருக்கப்போறேன்னு சொல்லிட்டு வந்தே இங்கே மூணுபேரும் சேர்ந்து பேசிகிட்டு இருக்கீங்களே !?