“ஹ்ம்ம்ம் பேசாமல் நான் உனக்கு முன்பே பிறந்திருக்கலாம்.. உன் இடத்தில் இருந்து நம்ம குடும்பத்தை நான் தாங்கி இருப்பேன் இல்ல.. நீ இப்படி தனியா சிங்கப்பூர் வரைக்கும் வேலைக்காக போக வேண்டியது இருக்காது இல்லை.. “
“இல்லைடா.. இப்பல்லாம் வேலைக்காக, படிப்புக்காக னு எத்தனை பொண்ணுங்க தனியா வெளிநாடு போறாங்க தெரியுமா??? நம்மள மாதிரி கிராமத்துல தான் பொண்ணுங்களை ஊரை தாண்டி அனுப்பறதுனா பயந்துக்கறாங்க...
உன் அக்கா யாரு?? தைரியமான பொண்ணாக்கும்...சிங்கப்பூர் எல்லாம் ஒரு தூசிடா!! இப்ப என்ன ஒரு வருஷம்தான.. சீக்கிரம் ஓடிடும்.. அதுக்கப்புறம் நான் வந்து இங்கயே இருக்க போறேன்..
நீ அதெல்லாம் யோசிச்சு குழப்பிக்காத. நல்லா படி. அப்பதான் நல்ல காலேஜ் சேர முடியும்.. நல்ல காலேஜ் கிடைத்தால் தான் சீக்கிரம் வேலை கிடைக்கும்,..<
...
This story is now available on Chillzee KiMo.
...
திரி.. நீ இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும்
உன் அப்பாயிம் அப்படிதான்.. அவ இருந்தா சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.. நானும் அவளும் எப்பவும் ஒன்னாவே சுத்திகிட்டு இருப்போம் “ என்று பாட்டி தன் பழைய கதைகளை பேச பாரதி அதை சுவராசியமாக கேட்டு கொண்டெ திருச்சி பேருந்து நிறுத்தத்தை அடைந்தனர்..