"ம்ம்... நல்லது. அப்புறம் எப்படி ஆக்சிடண்ட் நடந்ததாம்"
"அது ஒரு லாரி எதுத்தாக்குல வந்து வண்டிய இடிச்சு தள்ளிவிட்டுட்டுப் நிக்காம போய்டுச்சாம்"
"வண்டி நம்பர் தெரியுமா"
"அதெல்லாம் தெரியல தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல போலிஸ் வருவாங்களாம் அவங்க வந்து தீர விசாரிப்பாங்களாம்"
"ம்ம... சரி"
"நீங்க முழிச்சதும் டாக்டர் வந்து சொல்லச் சொன்னாங்க நான் போய் கூட்டிட்டு வரேன் தம்பி"
"சரி போங்க"
சறிது நேரத்தில் ஒரு ஆண் டாக்டர் வந்து கௌவுதமைப் பரிசோதித்துவிட்டு நாளை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றும் இன்னும் ஒரு வரத்திற்கு பெட் ரெஸ்ட் வேண்டும் மற்றும் காலை அசைக்கக் கூடாது என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
"என்ன கோபி அண்ணா என்ன காப்பாத்துன டாக்டர் வரலையா அவங்களுக்கு நன்றி செ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பள்ளியிலேயே சேர்த்துவிட்டார். அவள் படிப்பு செலவு முழுவதையும் தானே பார்த்துக் கொள்வதாக மகேஸ்வரனிடம் கூறிவிட்டார்.
அதற்கு பிறகு நிர்மலா ரொம்ப காலம் உயிருடன் இல்லை. நான்கு வருடங்கள் கழித்து இறந்துவிட்டார். அவர் இறப்பிலிருந்து மீண்டு வருவதற்கு அவரகள் அனைவருக்கும் நீண்ட நாள்கள் ஆகியது.