''அநியாயத்துக்கு நியாயமா இருக்கு ,நானும் தமிழ் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன் ,ஆனா பாரு வயசானவ ,அதனால் சட்டு புட்டுன்னு சொல்லி வை ''என்று வழக்கம் போல் பாலை பௌண்டரிக்கு விரட்டினார் .
பின் வெகு சாதாரணமாய் ''எனக்குதான் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு ,அதோட இந்த குக்கிராமத்தில் தமிழை கல்யாணம் செய்து தங்கி இருக்க ஒருத்தி வந்தா கூட ,இது போல் கையோட கை சேர்த்து ,சிந்தனை செயல்ன்னு எல்லாத்துலயும் ஒத்து போவாளா என்பது சந்தேகமே ,அதான் நீங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு ''
''ஏன் நீங்க இல்லியா ,உங்களை பார்க்கும் போதெல்லாம் நானும் கேட்கணும்ன்னு நினைப்பேன் ,இப்போ சொல்லுங்களேன் ,எப்படி இந்த குக்கிராமத்தில் பண்ணையாரை கல்யாணம் செய்து வந்து ,அவரோட சகலத்திலும் இணையா நிக்குறீங்க ''
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 21
{kunena_discuss:1152}