“ப்ச்... ஒன்னுமில்லை.. இது மாதிரியான கேள்வியை என் கிட்ட ஒருத்தர் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு...”
உடைந்து ஒலித்த சரண்யாவின் குரல் அவளின் மனநிலையை படம் பிடித்துக் காட்டியது.
சரண்யாவின் அந்த குரலும், அவள் சொன்னதும் மித்ரனின் மனதை மட்டுமல்ல நளினியின் மனதையும் உருக்கியது.
ஆனால் அவளை இப்படி எமோஷனல் மன நிலையில் தொடர்ந்து நீடித்திருக்க வைப்பது சரி இல்லை என்பது நளினிக்கு புரிய,
“சரண்யா, நீ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு. நான் போய் உனக்கு கஞ்சி செஞ்சு எடுத்துட்டு வரேன்.” என்றாள்.
“ஹையோ, அதெல்லாம் வேண்டாம்மா. நான் பார்க்கிறேன். நிஷாவை வேற ஸ்கூலுக்கு ரெடி செய்யனும்” என அவசரமாக மறுத்தாள் சரண்யா.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ ரெஸ்ட் எடு... படு...” என்று பொய்யான கண்டிப்புடன் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
மர்ந்திருந்தான்.
“என்ன மித்ரன், ஒன்னும் சொல்லாம இருக்க?”
“என்ன சொல்லம்மா?? சரண்யாவை நான் எந்த விதத்திலேயும் கட்டாயப் படுத்தலை. அவக் கிட்ட பொறுமையா தான் பேசுறேன்... அவளுக்கும் என்னை பிடிக்கும், இல்லைனா ஏன் நிஷாவை பார்த்துக்கோங்கன்னு என் கிட்ட சொல்றா???”
“எப்போ சொன்னா??”