(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - என்னவளே - 11 - கோமதி சிதம்பரம்

ennavale

வேகமாக அறைக்குள் வந்த ரிஷி, கீதாவும் சேகரும் இருக்கும் போட்டோஸ்யே பார்த்து கொண்டு இருந்தான்.

அந்த போட்டோஸ் யில் ஏதும் தப்பு இருப்பது போல அவனுக்கு தெரியவில்லை. ஆனால், கீதா எப்படி சேகர் கூட போட்டோ எடுக்க முடியும்.

அதும், அந்த போட்டோஸ் யில் கீதா சிரித்து கொண்டு மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.

இந்த மூன்று வருடத்தில் என்னை பற்றி அவள் யோசிக்கவேயே இல்லையா???? 

என்னுடைய நினைவுகள் ஏதும் இன்றி சந்தோசமாக சேகர் யுடன் இருந்து இருக்கிறாள். என்று நினைக்கும் போதேயே அவனது மனம் வலித்தது.

என்னுடன் கூட போட்டோ எடுக்க வெட்கப்படுபவள் எப்படி சேகரயுடன் இவ்ளோ சந்தோசமாக போட்டோக்கு போஸ் கொடுத்து இருக்கிறாள்.

யோசிக்க , யோசிக்க ரிஷிக்கு கீதாவின் மீது கோபம் அதிகரித்தது. கீதாவின் மீது முழு உரிமையும் தன்னுடையது என்பதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தான்.

வேகமாக கீதாவின் அறைக்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து நடந்தவன் எதிரில் வந்த பருவதம் அம்மாளின் மீது இடித்து கொண்டான்.

அவன் இடித்த வேகத்திலேயே ரிஷியின் அவசரம் பருவதம் அம்மாவிற்கு நன்றாக புரிந்தது.

அதும், அவன் கையில் இருக்கும் லேப்டாப் யில் கீதாவும் சேகரும் சிரித்து கொண்டு சமைப்பது போல இருந்த போட்டோவும் இருந்தது.

ரிஷியின் முகத்தை பார்த்ததிலேயே அவனது கோபம் பருவதம் அம்மாவிற்கு புரிந்தது கூடவேயே சிரிப்பையும் வரவழைத்தது.

அத்தை தன்னை பார்த்து சிரித்து கொண்டு இருப்பதை பார்த்த ரிஷிக்கு மேலும் கோபம்  வந்தது .

எதுக்கு இப்ப சிரிக்குறிங்க???? ..... என்று கேட்ட ரிஷியின் கையை பிடித்து அருகில் இருந்த ஸோபாவில் உட்காரவைத்தார் பருவதம் அம்மாள்.

அத்தைக்கு அனைத்தும் தெரியும் என்பதால் ரிஷியும் அமைதியாக உட்கார்ந்தான். ஆனால், கீதாவின் மீது இருந்த கோபம் சிறிதும் தணியாமல் இருந்தான்.

இவ்ளோ வேகமா எங்க ரிஷி கிளம்பிட்டா????? என்று கேட்ட பருவதம் அம்மாளை ரிஷி முறைத்து பார்த்தான்.

ஹேய் என்ன ஏன்டா முறைக்குற???? உன் கோபத்தை உனக்கு பொண்டாட்டியா வர போறவ கிட்ட காட்டு டா....

நீங்க இப்ப வராம இருந்து இருந்த அவகிட்ட தான் காம்பிச்சுருப்பேன்.... நீங்கதான் அதுக்குள்ள வந்துட்டீங்களேயே ....

சொல்லுங்க... என்ன விஷயமா என்ன பார்க்க வந்திங்க... சொல்லுங்க ..... என்று கோபத்துடன் கேட்கும் ரிஷியை சிறுகுழந்தையை போன்று பார்த்தார் பருவதம் அம்மாள்.

நான் உன்ன பார்க்க வந்தது இருக்கட்டும் நீ ஏன் இப்ப இவ்ளோ கோபமா கீதாவை பார்க்க கிளம்பின???

அப்படி என்னடா அவ  செஞ்சுட்டா.....

பருவதம் அம்மாள் கேட்டு முடிக்கும் முன்னரேயே அவர் முன்பு லேப்டாப் யை தூக்கி போட்டான் ரிஷி.

.என்ன பார்த்த ஓடுறா .... ஏன் ,மேடம் இங்க வந்ததுல இருந்து பழைய மாதிரி இப்ப வரைக்கும் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசல...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நாங்க ஒண்ணா இருந்த போது கூட என்னோட ஒரு போட்டோ கூட எடுத்தது இல்ல ....

ஆனா, இங்க பாருங்க..,.. எத்தனை போட்டோ அதும் ரெண்டு பேருக்கும் எவ்ளோ சந்தோஷமுன்னு..... இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்....

உண்மையா லவ் பண்ற யாரும் இந்த போட்டோஸ் எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டாங்க.... எனக்கு வர கோபத்துக்கு என்று கூறியவன் சோபாவின் மீது தன் பலம் கொண்டு குத்தினான்.

இதுல, நீங்க வேற அப்படி என்ன செஞ்சுட்டானு என்கிட்டயே கேட்குறீங்க  இல்ல.....

போதும் நிறுத்துடா... நீ  வேணுனா கீதாவை திட்டிக்கோ.... எதுக்கு என் பையனும் சேர்த்து பேசுற.... கீதாவோட போட்டோல சிரிச்சுட்டு நிக்குறது ஒரு குத்தமா டா....

ரிஷி ! உன்ன நேரடியா கேட்குறேன் கீதாவா சந்தேகப்படுறிய ????  என்று கேட்ட பருவதம் அம்மாளின் முகத்தை பார்த்த ரிஷி பதில் ஏதும் கூறாமல் இருந்தான்.

பதில் சொல்லுடா ... என்று அதட்டி கேட்ட பின்னரேயே பருவதம் அம்மாளுக்கு இல்லை என்பது போல தலை ஆட்டினான்.

இதோ பாரு  ரிஷி .... உன்னோட பிரச்சனை என்ன  தெரியுமா? நீ கீதா மேல ஓவர் possesive இருக்க...  அதான் உன்ன இப்படி கோப்பட வைக்குது....

உன்னோட possesiveness  யா தள்ளி வச்சுட்டு பார்த்த உனக்கேயே இந்த போட்டோஸ்ல  தப்பு இல்லனு தெரியும்... என்று கூறிய பருவதம் அம்மாளை புரியமால் பார்த்தான் ரிஷி.

அவனது பார்வையை உணர்ந்த பருவதம் அம்மாள்  மேலும் ரிஷிக்கு புரிய வைக்க முயற்சித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.