எங்க வாழ்க்கைக்கு அது மட்டும் போதாதுன்னு ஏன் மாமியார் நெனைச்சாங்க.... கல்யாணம் ஆனதும் குழந்தை பொறக்கனுன்னு நினைச்சாங்க....
அப்பதான், எனக்கு குழந்தை பொறக்காதுனு டாக்டர் சொன்னாங்க...
எனக்கு ரொம்ம்ப கஷ்டம் ஆகிடுச்சு.... என்னால இந்த வீட்டுக்கு வாரிசு கொடுக்க முடியாதுனு தெரிஞ்சுது.....
என்னால இந்த வம்சம் அழிய கூடாதுன்னு சிவகாமிய உங்க மாமாக்கு கட்டி வைக்க நான் ஒத்துக்கிட்டேன்....
நான் பிரச்சனை பண்ணாம ஒத்துக்கிட்டதுல என் மாமியாருக்கு ரொம்ம்ப சந்தோசம். உன் மாமாக்கும் என் அண்ணாகும் இதுல கொஞ்ச கூட இஷ்டம் இல்ல.
அண்ணா, குலதெய்வம் கோயிலுக்கு போய் ஜோசியம் கூட பார்த்தாங்க, ஆனா, அங்கையும் எனக்கு குழந்தை பொறக்காதுனு சொல்லிட்டாங்க.....
அத்தை, அப்புறம் எப்படி சேகர் உங்களுக்கு பொறந்தான்..... அதும், சின்ன அத்தைக்கு குழந்தை இல்ல.... என்று புரியம்மாள் கேட்டான் ரிஷி.
அது தான் ரிஷி என் தலை எழுத்து, சிவகாமி கல்யாணம் ஆகி வந்த மூணு மாசத்துல நான் உண்டானானேன்...
வீட்ல எல்லார்க்கும் ஆச்சரியம்... டாக்டர் சொன்னது ஜோசியர் சொன்னது எல்லாம் பொய்யாகிடுச்சு.
சிவகாமி நிலைமை தான் ரொம்ம்ப கஷ்டம் ஆகிடுச்சு.... என் மாமியார் அவளை ரொம்ம்ப திட்ட ஆரம்பிச்சாங்க .....
மாமாவும் அவகிட்ட ஒழுங்கா பேசுறது இல்ல.... சிவகாமியோட குணமும் யாருக்கும் பிடிக்காம போய்டுச்சு...
சிவகாமி ரொம்ப ஏழை ரிஷி.... அதனால, நம்ம பணம் சொத்து மேல ரொம்ம்ப ஆசைப்பட்ட... அதுக்கு துணை யா அவ தம்பி கோபியும் இருந்தான்.
எனக்கு சேகர் பொறந்ததும் சொத்து எல்லாத்தையும் அத்தை அவன் பேருக்கு மாத்திட்டாங்க... என்னையும் உங்க மாமாவையும் ஒரு கார்டியன் போல நியமிச்சாங்க....
மாமாவும் இதுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லல.... ஆனா, சிவகாமியளா இதை தாங்கிக்க முடில.... மாமாகிட்டையும் அத்தைகிட்டயும் சண்டை போட்ட.....
மாமா அவ பேச்ச கேட்கல அவரோட உலகம் சேகர்னு வாழ ஆரம்பிச்சாரு..... என்கிட்ட கூட அவர் அதிகமா பேசமாட்டார்.
அத்தை, சிவகாமியை இஷ்டம் இருந்த இங்க இருக்க சொன்னார்.... இல்லை வீட்டை விட்டு வெளிய போக சொல்லிட்டாரு....
நான் கூட அத்தை கிட்ட சிவகாமிக்காக பேசி பார்த்தேன். ஆனா, சிவகாமி தம்பி கோபி மாமா பெயர் சொல்லி நிறைய இடத்துல பணம் வாங்கி ஏமாத்திட்டு இந்த ஊரவிட்டேயே ஓட்டிட்டாரு.
இதனால தான் அத்தை சிவகாமிக்கு எந்த ஒரு சொத்தும் கொடுக்காம விட்டுட்டாங்க.....இதுக்கு நடுவுல அண்ணியும் இறந்துட்டாங்க....
சேகரும் அவங்க அப்பாக்கிடையே நல்ல ஒட்டிக்கிட்டான்... அவன் கூட இருக்கும் போது மட்டும் தான் அவர் ரொம்ம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியும்.
ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணி இருந்தாலும் அவர் மனசுல அந்த லவ் பண்ண பொண்ணு தான் இருந்து இருக்க ரிஷி. என்று ஏக்கத்துடன் கூறும் பருவதம் அம்மாளை பார்த்து ரிஷியும் கவலைப்பட்டான்
அத்தை, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க..... நீங்க சின்ன அத்தைய மாமாக்கு கல்யாணம் செஞ்சு வச்சதுக்கு பதிலா அவர் லவ் பண்ண பெண்ணையே கல்யாணம் பண்ணி வச்சு இருந்து இருக்கலாம்.....
மாமாவது சந்தோசமா இருந்து இருப்பாரு.... என்று கூறிய ரிஷியை வேதனையுடன் பார்த்தார் பருவதம் அம்மாள்
ரிஷி அந்த பொண்ணு கீழ் ஜாதி பொண்ணுடா... அதும் அநாதையும் கூட .... அவ உங்க மாமாகூட பணத்துக்காக தான் பழகி இருக்க டா ......அதும், அந்த பொண்ணு அவங்க மாமாகூட எங்கையோ லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போய்ட்டா......
அதுக்கு அப்புறம் மாமா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாரு.... அதும் அத்தைக்காக தான்....
இப்படி லவ் பண்ண வாற சேகரயோட லவ் யா ஒதுக்கமாட்டேனு சொன்னாரு அத்தை என்று தன் சந்தேகத்தை கேட்டான் ரிஷி.
பயம் தான் ரிஷி.... அவர் லவ் பண்ண பொண்ணு பணத்துக்காக ஓடி போனமாதிரி சேகர் லவ் பண்ற பொண்ணு போய்டுவாளோனு ரொம்ம்ப பயந்தார்.
சேகர் சொன்ன பொண்ணும் ஒரு அனாதை அதான்..... சேகரும் அவருக்கு புரிய வைக்க நினைக்கல.... ரெண்டு பெரும் ரொம்ம்ப சண்டை போட்டாங்க....
இதுக்கு நடுவுல சிவகாமியும் சேகரும் கூட சொத்துக்காக சண்டை போட்டாங்க..... சேகர் லவ் பண்ற பொண்ணுக்கு நம்ம சொத்துல இருந்து நிறைய பணம் கொடுக்கறதா சிவகாமி மாமா முன்னாடியே சொல்லிட்டா.....