நீ இப்ப என்ன சொன்னாயே??? கீதா உன்கிட்ட பேசுறது இல்ல... உன்கூட போட்டோ எடுக்க கூட வெக்க படுவா அப்படிதானாய.... அது கரெக்ட் தானாய ரிஷி...
நீங்க ரெண்டு பெரும் லவெர்ஸ்... அதும் மூணு மாசம் ஒன்னய உன்கூட இருந்து இருக்க ... அவ உன்ன கட்டிக்க போறவ அவ உன்கிட்ட வெட்கபட்டுட்டு அப்படி சொல்லியிருக்க...
ஆனா, இது என் சேகர் கிட்ட அவ செய்யணும்... ஒரு நண்பன் போல இல்ல ஒரு அண்ணன் கூட எடுக்கறது போல கூட எடுத்து இருக்கலாம்.
சேகர் கிட்ட வெட்க பட வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை. அதான், கீதா சேகர் கூட போட்டோ எடுத்து இருக்க.
நீயே நல்ல பாரு... இந்த போட்டோஸ் பார்த்த தப்ப எதாவது இருக்க.... சேகரயோட பார்வையோ கீதாவோட பார்வையில் ஏதும் தப்பு இருப்பது போல இல்ல... நீயே நல்ல பாரு...
பருவதம் அம்மாள் வார்த்தையை கேட்ட ரிஷியும் அந்த போட்டோசையை திருப்பி பார்த்தான். அவனுக்கும் அத்தை சொல்லுவது சரி எனப்பட்டது.....
அத்தை, நீங்க சொலறது எல்லாம் சரிதான். ஆனா, நான் கீதாவா சந்தேகபடல.... மறுபடியும் எங்க அவ என்ன விட்டுட்டு போய்டுவாளோனு பயமா இருக்கு.... அவ எனக்கு உரிமை உள்ளவ அத்தை.....
மூணு வருஷம் அவ இல்லாம நான் ரொம்ம்ப வலியா அனுபவிச்சுட்டே ன்..... இப்பவும், அவ என்ன விட்டுட்டு ஒதுங்கி தான் போற.... அவ மனசுல என்ன இருக்குனு தான் எனக்கு தெரியல அத்தை....
சிட்னில இருக்குற நண்பன் கிட்ட சொல்லி கீதாவை பத்தி விசாரிக்க சொன்னேன்.... சேகர் இருந்த வீட்டு முகவரியும்... கீதா இருந்த வீட்டு முகவரியும் ஒன்னு தாணு சொல்லிட்டான்.
மூணு வருஷமா அவ அங்கதான் இருந்து இருக்க.... ஆனா, அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற உறவுதான் என்னானு கண்டுபிடிக்க கொஞ்சம் டைம் ஆகும்னு சொல்றான்.
எனக்கு என்னமோ கீதா வாய் தொறந்து உண்மை சொன்ன தான் நமக்கு எல்லாம் தெரியுனு தோணுது ... என்று கவலையுடன் கூறும் ரிஷியின் முகத்தை பார்த்த பருவதம் அம்மாள்.
உன் நிலைமை எனக்கு புரியுது ரிஷி..... நமக்கு சொந்தம் னு நினைக்குறவங்கள நம்மளால சீக்கிரம் விட்டு தர முடியாது. என்று கூறிய பருவதம் அம்மாள் கண்ணீரை துடைத்து கொண்டார்.
அத்தை, என்ன ஆச்சு நீங்க ஏன் கண் கலங்குறீங்க???? என்று பதட்டப்பட்ட ரிஷியை அமைதியாக இருக்கும் படி பருவதம் அம்மாள் கையசைத்தார்.
அழுகையை நிறுத்தியவர், எல்லாரோட வாழ்க்கையிலும் காதல் இருக்கும். என் வாழ்க்கையிலும் இருந்துச்சு ரிஷி.... உன் மாமாவை நான் ரொம்ப லவ் பண்ணேன்.ஆனா, அவர் வேற ஒரு பொண்ணை லவ் பண்ணார்.
என்னால அவர் இல்லாம வாழ முடில. தற்கொலை, செஞ்சுக்க கூட பார்த்தேன். அப்புறம், அண்ணா தான் அவர்கிட்ட என்ன பத்தி சொல்லி எங்க ரெண்டு போரையும் சேர்த்து வச்சார்.
நாங்க ரெண்டு பெரும் சேரத்துக்கு அண்ணா ரொம்ம்ப கஷ்டப்பட்டார் ரிஷி .... அண்ணாவோட கஷ்டத்தை பார்த்து அண்ணி என்கூட பேசுறத கூட நிறுத்திட்டாங்க.
ஏன் அத்தை அம்மா உங்ககிட்ட பேசுறது நிறுத்திட்டாங்க??? ஒரு அண்ணனா எங்க அப்பா அவர் கடமையா தானே செஞ்சாங்க????? .....
நீ சொல்றது சரிதான்.... அண்ணி ரொம்ம்ப நால்லவங்க ரிஷி.... என்ன ரொம்ம்ப நல்ல பார்த்துக்கிட்டாங்க.... உங்க மாமா லவ் பண்ண பொண்ணு ஒரு தப்பான பொண்ணு .
இது, தெரியாம உன் மாமா அந்த பொண்ண லவ் பண்ணிட்டாரு...
அண்ணா இந்த விஷயத்தை என் வீட்டுக்காருக்கு புரிய வைக்க ரொம்ம்ப கஷ்டப்பட்டார்.
இதனால, அண்ணா ஒழுங்கா வீட்டுக்கு வர முடில... அண்ணிக்கும் அண்ணாக்கும் இதனால நிறைய சண்டை வர ஆரம்பிச்சது.
சண்டைக்கு காரணம் நாந்தான்.... அனா, உங்க மாமா மேல எனக்கு இருந்த லவ்க்கு முன்னாடி இது எல்லாம் எனக்கு பெருசா தெரில....
அவர்யா எப்படியாவது கல்யாணம் பன்னிட்டு வாழனுன்னு மட்டும் தோணுச்சு.... கண்டிப்பா என் அண்ணா எனக்கு அவர்யா கல்யாணம் செஞ்சு வைப்பாருனும் தோணுச்சு.....
நான், நினைச்ச மாதிரியே அண்ணா என் வீட்டுகாரக்கு அவர் லவ் பண்ண பெண் யோட தப்பான குணத்தை எடுத்து சொல்லி புரிய வச்சு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு.
என் கல்யாணத்தைக்கூட அண்ணி என்கிட்ட ஒழுங்கா பேசலை ரிஷி..... எனக்கு கஷ்டமா இருந்துச்சு....
ஆனா, உன் மாமவை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அண்ணாகும் அண்ணிக்கும் சண்டை வராதுன்னு நினைச்சேன்.
என்னை உன் மாமா நல்லாத்தான் பார்த்துக்கிட்டார்.... அவரோட, மனசுல அந்த தப்பான பொண்ணோட நினைப்பும் இருக்க தான் செஞ்சது.... அந்த பொண்ணு இவருக்கு செஞ்ச துரோகத்தை நெனைச்சு ரொம்ம்ப கஷ்டப்பட்டார்.
என்கிட்ட, அத அவர் காட்டமாட்டார்.....நானும் புரிஞ்சாலும் அவர் முன்னாடி எதும் சொல்லமாட்டேன்..... அவர்கூட வாழந்த போதுன்னு இருந்தேன்.