“ஏன் இங்கே இருக்க முடியாது?”
“எந்த உரிமையில் நான் இங்கே இருக்க முடியும்?”
“இதைத்தான் உன் வாயால் எதிர்பார்த்தேன். நீ எங்க வீட்டுக்கு உரிமையா வர்றதுக்கு நான் யோசனை சொல்றேன். பேசாம நீ எங்க வீட்டுக்கு மருமகளா வந்துடேன். எனக்கு முடியாம இருந்தப்ப நீ என்னை அப்படி கவனிச்சுக்கிட்டே. என் அம்மாவுக்குப் பிறகு என் மனசைப் புரிஞ்சுக்கிட்ட பொண்ணு நீதான்.”
இதை விட வெளிப்படையாக அவன் மனதில் உள்ளதை சொல்லும் வரை காத்திருக்க வேண்டுமா?
“சும்மா உளராம போய் காரை எடு. வீட்டுக்குப் போகலாம்.”
“நான் உளரலை கிருஷ்ணா. நான் அம்மாக்கிட்ட கூட பேசிட்டேன். அவங்க அப்பாகிட்ட சொல்வாங்க. இனி உனக்குன்னு நாங்க இருக்கோம்.”
அவள் திகைத்து அமர்ந்திருந்தாள்.
“என்ன நம்ப முடியலையா? இரு அம்மாவையே சொல்லச் சொல்றேன
...
This story is now available on Chillzee KiMo.
...
் யுகா உன்னை விரும்புகிறான். என்று சொல்லி குழப்பி விட்டவள். அதற்காக நான் குழம்பிப்போய்விடுவதா?
தனக்குப் பிடித்தமானவர்களுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் நடக்குமா?
எனக்கோ, யுகாவுக்கோ, அத்தைக்கோ பிடித்தால் மட்டும் போதுமா? முக்கியமாக மகேந்திரனுக்குப் பிடிக்க வேண்டுமே?