அவன் தம்பியுடன் பழகுவதையே அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னை எப்படி திருமணம் செய்துகொள்ள ஒப்புவான்?
யுகேந்திரனிடம் பேச வேண்டும். அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்ற தனது செல்லை எடுத்துப் பார்த்தாள். அது அணைந்திருந்தது. முந்தைய தினம் சார்ஜ் போட மறந்ததை எண்ணி தன்னையே நொந்துகொண்டாள்.
வீட்டுக்குச் சென்ற பிறகு அவனிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைத்தவளால் அதை செயல்படுத்தவே முடியவில்லை.
அவனை உயிரற்ற உடலாகத்தான் அவனை அவள் மீண்டும் பார்த்ததே.
இன்றும் அவளது மனசாட்சி அவளைக் குத்திக் கொண்டேயிருக்கிறது. அன்று மட்டும் அவள் அவனுடன் கிளம்பிச்சென்றிருந்தாள் அவனது மரணத்தைத் தடுத்திருக்கலாம். இந்த குற்ற உணர்வுதான் அவளை தினம் தினம் வாட்டிக்கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மீள
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டதைப் பார்த்து அவளுக்கு மகிழ்ச்சி.
அவளது கணவனும் இருக்க அவர்கள் இருவருமாய் பேசிக்கொண்டிருந்தனர்.
சாருமதி அவளை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“கிருஷ்ணா. எப்படி இருக்கே? அத்தான் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறார்?”
அவள் கேட்டதும் கிருஷ்ணவேணியின் முகம் சிவந்தது.