(Reading time: 7 - 14 minutes)

.இன்னொரு உயிரை உலகிற்கு

கொண்டு வரும் போதும்.

தான் ஓரு குழந்தைக்கு தாயான பின்பும்

தன்னவனிடம் குழந்தையாய் மாறும் போதும்.

தந்தை பிடிக்குமா தன்னவன் பிடிக்குமா என்ற கேள்விக்கு

எப்போதும் தந்தை என்று சொல்லி சிரிக்கும் போதும்.

தன்னவனின் கஷ்டத்தில் அவனுக்கு

தந்தையாய் மாறி தைரியம் ஊட்டும் போதும்.

தன்னோட பிள்ளைகளை தலை நிமிர வளர்க்கும் போதும்.

வயசான காலத்துல பெத்தவங்களையும் மாமனார் மாமியாரை

பாத்து பாத்து கவனிக்கும் போதும்.

பேர குழந்தைகளை பார்த்து பார்த்து சந்தோசப்படும் போதும்.

எங்கள் பெண்கள் அழகோ அழகு தான்

வெல் செட் டா சரவணா என்று ஷக்தி அணைத்து கொள்ள புன்னகையும் பூரிப்புமாக தன்னவனை தனக்குள் நிறைத்து கொண்டு நின்றாள். இவன் என்னவன் என்ற கர்வமே அவளை மேலும் அழகாக்கியது.சரவணன் பேசியதை எதார்த்தமா கேட்ட மித்ரனுக்கும் பூரித்தது மனம் நிறைந்தது. தன் பிரிய மகளை சரவணன் நெஞ்சிற்குள் வைத்து தங்குவான் என்ற நிம்மதி பிறந்தது. 10 வயது குறைந்தது போல துள்ளியது மனம்.

சரவணா மாமா சாப்பிட வாங்க என்று ரியா அவனின் கையை பிடித்து இழுத்தாள்.

ஓஓஓஓ போலாமே நீ சாப்டியா.

இல்லை மாமா நம்ம எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவோம் உங்களுக்கு இடம் போட்டு வச்சுருக்கேன். உங்க அக்கா எங்க குட்டி.

சாப்பிடற இடத்துல சண்டை போட்டுட்டு இருக்காங்க மாமா வாங்க. என்ன சண்டை எதற்கு சண்டை சஹி சண்டை போடறாளா என்று யோசித்தவாறு சென்றவன் சிரித்து விட்டான். சக்தி ஒரு டேபிள் மீது படுத்திருக்க அவன் தோள் மீது ஒரு 3 வயது குட்டி பாப்பா அமர்ந்திருந்தது.லக்ஷ்மியும் அனிஷாவும் அவனை இரு பக்கமும் இழுத்து கொண்டிருந்தனர். சஹி பாவம் போல் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

சக்தி ஏன் இப்படி பண்ற.

ஏன் எனக்கு தூக்கம் வருது தூங்குறேன் மஹி பார்த்தா தெரில.

ரூம்ல போய் தூங்கு எங்களை சாப்பிட விடு இப்படி படுத்துக்கிட்டா எப்படி சாப்பிட ஷக்தி. கண்டுகொள்ளாமல் தூங்குவது போல் நடித்தான்.

சக்தி அண்ணா

என்ன பாச மலரே.

அண்ணா ப்ளீஸ் அண்ணா. சாப்பிடும் போது நிறைய கலாட்டா யோசிச்சுருக்கோம்.பெரியவங்க வரதுக்குள்ள பண்ணனும் இல்லனா விட மாட்டாங்க. வேணும்னா உங்களுக்கும் பிளான் சொல்றோம் நீங்களும் சேர்த்துக்கோங்க இனி நம்ம குரூப் ல.

ஹன்ன்ன்ன் இது நல்ல பிள்ளைக்கு அழகு. மஹி பிரண்ட்னு சொன்னா மட்டும் போதாது இப்படி சதியில் கூட்டும் சேர்க்கணும் புரியுதா.

 புரியுது புரியுது எழுந்திரு முதல் ல.

உத்தரவு மஹா ராணி.

சக்தி என்ன டா சவுண்ட் அதிகமா வருது என்று கேட்டவாறே நாராயணன் சாப்பிடும் இடம் வந்தார் . அச்சோ அப்பா அண்ணனும் அண்ணியும் சாப்பிட இலை போட சொல்லிட்டு இருக்கேன் என்று பம்மினான்.

வா மா சஹி இப்படி உக்காரு.நீ ஏன் டா நிக்குற என்று சரவணனை ஒரு அதட்டல் போட்டார். இதோ உக்காந்துட்டேன் பா என்று சஹியின் அருகில் அமர்ந்தான்.

சக்தி அம்மா எங்க டா சாப்பிட வர சொல்லு. மஹி அப்பா அம்மாவே கூட்டிட்டு வா மா எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்று சொல்ல சிறுவர் பட்டாளம் அமைதியானது. ஆனால் பேசியும் சிரித்தும் சந்தோஷமாகவே இரவு உணவு முடிந்தது.

விழா முடிந்து சரவணன் குடும்பம் கிளம்ப தயாரானது. ஒருவருக்கொருவர் விடை கொடுத்துக் கொண்டனர். சரவணனை அனைத்தை வாரே ரியா மாமா இங்கயே இருங்க மாமா நம்ம விளையாடலாம் என்றாள்.

மாமாக்கு இப்போ வேலை இருக்கு டா தங்கம்.ஒன்னு பண்ணுவோமா எனக்கு பதிலா என் இதயம் குடுக்கட்டுமா.

ரியா ஏதோ இதய வடிவ பலூன் என்று நினைத்த வாரு வேகமாக தலையாட்டினாள.

  குடுங்க மாமா என்று கை ை நீட்டினாள்

.நீட்டிய கை விரல்களை மடக்கினான் ஆள் காட்டி விரலை சகியை நோக்கி காட்டினான் அங்கே இருக்கிறது குட்டி போய் எடுத்துக்கோ என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.